உருகுமால்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

உருகுமால்

மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருக்காட்கரை. ஒரு நாள் ஆழ்வாரோடு கலந்த கலவியை நினைவூட்டி ஒருவாறு தரித்து நிற்கச் செய்தவன் திருக்காட்கரை எம்பெருமான். ஆழ்வார் அவனைப் பற்றிக் கூறுகிறார் இத்திருவாய்மொழியில்.

பகவானின் சிறப்பை ஆழ்வார் ஏக்கத்துடன் கூறல்

கலி விருத்தம்

திருக்காட்கரையானை நினைத்தால் வேட்கை பெருகும்

3612. உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,

பெருகுமால் வேட்கையும் என்செய்கேன் தொண்டனேன்,

தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,

மருவிய மாயன்றன் மாயம் நினைதொறே.

திருக்காட்கரையானே எப்படி அடிமை செய்வேன்?

3613. நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்,

வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,

சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,

நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே.

திருக்காட்கரையானின் மாயம் தெரியவில்லையே!

3614. நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை

ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,

சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,

கார்முகில் வண்ணன்றன் கள்வம் அறிகிலேன்.

என்னப்பன் என் உயிரை உண்டுவிட்டான்

3615. அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க,

நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,

வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,

சிறியவென் னாருயி ருண்ட திருவருளே.

என் கண்ணன் கள்வங்கள் இருந்தவாறு என்னே

3616. திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,

உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,

திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,

கருவளர் மேனிஎன் கண்ணன்கள் வங்களே.

என் உயிர் திருக்காட்கரையானையே ஏத்தும்

3617. என்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,

அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,

புன்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,

என்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே.

என் உயிர் என்னப்பனை நினைந்து கரையும்

3618. காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,

வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,

அட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,

கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே.

என்னப்பனுக்கு என்னுயிர் அடிமையாகிவிட்டது

3619. கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,

நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,

காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பதற்கு,

ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே.

என் உயிர் பட்ட பாடு யாருயிர் பட்டது?

3620. ஆருயிர் பட்ட தெனதயிர் பட்டது,

பேரிதழ்த் தாமரைக் கண்கனி வாயதோர்,

காரெழில் மேகத்தென் காட்கரைக் கோயில்கொள்,

சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே.

திருக்காட்கரையப்பன் என்னை விழுங்கிவிட்டான்

3621. 'வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில்'என்று

ஆர்வுற்ற என்னை யழியவென னில்முன்னம்

பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,

காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே.

இவற்றைப் படித்தால் சன்மம் முடிவெய்திவிடும்

3622. கடியனாய்க் கஞ்சனைக் கென்ற பிரான்றன்னை,

கொடிமதிள் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,

வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்

முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே.

நேரிசை வெண்பா

மாறன் சொல்லையே நான் சொல்வேன்

'உருகுமால் என்னெஞ்சம் உன்செயல்க ளெண்ணிப்,

பெருகுமால் வேட்கை'எனப் பேசி,-மருவுகின்ற

இன்னாப் புடனவன்சீர் ஏய்ந்துரைத்த மாறன்சொல்,

என்னாச்சொல் லாதிருப்ப தெங்கு?

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is இன்னுயிர்ச்சேவல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  எங்கானல்
Next