பரப் பிரம்மமாக : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இன்னம் (ச்லோகத்தில்) ஒரு பாதம் அர்த்தம் சொல்லப்படாமலிருக்கிறது. அது என்ன?

குருஸ் – ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம

நிஜமான குருவைப் பற்றித்தான் பேச்சு என்றால் இதுவும் வாஸ்தவமாகத்தான் இருக்கவேண்டும். ‘அவர் எப்படி ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன்?’ என்று கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லவேண்டியிருந்த மாதிரியில்லை இது; அவரே பரப்ரஹ்மம் என்பது.

நம்மை அவர் முடிவாக ஒரு லக்ஷ்யத்தில் சேர்க்கிறார், (அது) ஆத்ம ஸ்வாராஜ்யம், ஞான ஜ்யோதிஸ் என்றெல்லாம் சொன்னதற்கு அர்த்தம் அவர் நம்மையே பரப்ரஹ்மமாக்குகிறார் என்பதுதான். அதாவது, ‘பரப்ரஹ்மம் தானப்பா நீயாக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறது’ என்று நமக்குப் புரியவைத்து, அந்த வேஷத்தைக் கலைத்து அதுவாகவே இருக்கும்படிப் பண்ணுகிறார். தாமே இப்படி ஆனவராயிருந்தாலொழிய நம்மை எப்படி இந்த மாதிரி ஆக்கமுடியும்? ஆகையினால்,

குருஸ் – ஸாக்ஷாத் பரம் – ப்ரஹ்ம

என்பதில் துளிக்கூட ஸந்தேஹமில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is நமஸ்காரத்திற்கு உரியவராக
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கரை ஏறியவர், ஏற்றுவிப்பவர்
Next