புராணத்தை போதித்தவர் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்தப் புராணங்களை ஈச்வரனே தேவிக்குச் சொல்வதாக அல்லது விஷ்ணுவுக்குச் சொல்வதாக, அல்லது விஷ்ணுவோ ப்ரம்மாவோ நாரதருக்கோ அல்லது ஒரு ரிஷிக்கோ சொல்வதாக அவற்றில் சொல்லியிருக்கும். அப்படி தெய்வங்களே சொன்ன கதைகளை அப்புறம் ஒரு ரிஷிக்கோ ராஜாவுக்கோ இன்னொரு ரிஷி சொன்னார் என்று சொல்லிக் கொண்டு போய்க் கடைசியில் இவற்றை வியாஸர் ஸூதருக்கு உபதேசிக்க ஸூதர் நைமிசாரண்யத்திலுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார் என்று முடித்திருக்கும்.

நைமிசாரண்யத்து ரிஷிகள் அப்பிராம்மணரான ஸூதருக்கு உயர்ந்த ஆஸனமளித்து உட்கார வைத்து மரியாதை பண்ணி அவரிடமிருந்து புராண சிரவணம் பண்ணினார்கள். இதிலிருந்தே புராணங்களுக்குள் மதிப்புத் தெரிகறது. அதோடுகூட, பிறப்பைவிட அறிவுக்குத்தான் மதிப்புத் தந்தார்கள் என்றும் தெரிகிறது. உயர்ந்த விஷயத்தை எந்த ஜாதியார் சொன்னாலும் மரியாதையோடு கேட்டுக் கொண்டார்கள் என்று தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வழிகள் பல ; குறிக்கோள் ஒன்றே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  நண்பனாகப் பேசுவது
Next