அன்னபூர்ணாஸ்துதி 1 நித்யானந்தகரீ வராபயகரீ லௌந்தர்யரத்னாகரீ நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி ! ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ பிக

அன்னபூர்ணாஸ்துதி

1.நித்யானந்தகரீ வராபயகரீ லௌந்தர்யரத்னாகரீ

நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி !

ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II

நித்யானந்தம் செய்பவள், வரம், அபயம் இவற்றை கையில் கொண்டவள், அழகின் கடலானவள், கோரபாபங்களை நீக்குபவள், நேரில் காணும் மஹேச்வரஸ்வரூபமானவள், ஹிமய மலையின் வம்சத்தை வளர்த்து பரிசுத்தமாக்கியவள், காசீபுரியில் வீற்றிருந்து ஆட்சி புரிபவள், கருணையைப் பொழிபவள் ஆகியதாய் அன்னபூர்ணா தேவியே எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

2.நாநாரத்ன விச்த்ரபூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ

முக்தாஹார விடம்பமான விலஸத்வக்ஷே£ஜ கும்பாந்தரீ !

காச்மீராகருவானி தாங்கருசிரா காசீபுராதீச்வரி

பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !!

பலவித ரத்னங்களிழைத்த ஆபரணங்களையணிந்தவள், தங்கமயமான அங்கியை யணிந்தவள், பளபளக்கும் முத்து மாலைத்துவளும் மார்பகத்தையுடையவள், காச்மீர -அகில் சந்தனம் மணக்கும் தேகம் கொண்டவள் காசீபுரத்தின் ஆட்சித் தலைவி, கருணைப் பிடி தருபவள் ஆகிய அன்னபூர்ணேச்சவரி, எனக்கு பி¬க்ஷ கொடுக்கட்டுமே.

3.யோகானந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைகருஷ்டாகரீ

சந்த்ரார்கானல பாஸமானயஹரீ த்ரைலோக்யரக்ஷ£கரீ

ஸர்வைச்வர்யகரீ தப:பல கரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !!

யோகத்தினால் ஆனந்தம் விளைவிப்பவள், தர்மம் ஒன்றிலேயே கவனம் அமையச் செய்பவள், சந்திரன், சூர்யன் அக்னி இவர்கள் போல் பிரகாசிப்பவள், மூவுலகையும் காப்பவள், எல்லோருக்கும் ஐச்வர்யம் நல்குபவள், தவத்திற்கு பயனளிப்பவள் - அவளே காசீபுரியில் ஆட்சிபுரியும் அன்ன பூர்ணையே!எனக்கு க்ருபை செய்து பி¬க்ஷயளிப்பாயே!

4.கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீஹ்யுமா சாங்கரீ

கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஹ்யோங்கார பீஜாக்ஷரீ!

மோக்ஷத்வார கவாட பாடனகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !!

கைலாஸமலைக் குகையை கோயிலாகக் கொண்டவள், கௌரீ, உமை, சங்கரீ, குமாரி, வேதப்பொருளாகப் புலனாகிறவள், ஒங்கார பீஜாக்ஷரங்களைக் கொண்டவள், மோக்ஷ வாசலைத் திறப்பவள், காசீபுரியில் ஆட்சி செய்பவள், ஆகிய என் தாயே!க்ருபை செய்பவளே!எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

5.த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ருஹ் மாண்டபாண்டோதரீ

லீலாநாடகஸ¨த்ர கேலனகரீ விஜ்ஞானதீ பாங்குரீ

ஸ்ரீவிச்வேச மன:ப்ரஸாதநகரீ காசீபுராதீச்வரி

பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !!

கண்ணுக்கு எட்டியதும் எட்டாததுமான ஐச்வர்யத்தை விளைவிப்பவள், அண்டசராசங்களை வயிற்றில் கொண்டவள். பற்பல லீலைகளை நடிக்கும் அவள் விஜ்ஞான தீபச்சுடரானவள். மேலும் ஸ்ரீவிச்வநாதரின் மனதிற்கினியவள். காசீபுரத்து ஆட்சியாளரான அந்த அன்னபூர்ணேச்வரித்தாய் கிருபை என்ற ஊன்றுகோலைத் தந்து பி¬க்ஷ கொடுக்கட்டுமே!

6.ஆதிக்ஷ£நிதஸமஸ்த வர்ணநிகரீ சம்புப்ரியா சாங்கரீ

காச்மீர த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ

ஸ்வர்க த்வார கவாட பாடநகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !!

அ தொடங்கி க்ஷ வரையிலான எழுத்துக்கள் வடிவானவள். சம்புவின் ப்ரியை, மங்களம் தருபவள், காச்மீரத்து த்ரிபுரேச்வரீ, மூன்று கண்ணுடையவள்;உலகமாதா; ஒய்வெடுக்கச்செய்பவள்;ஸ்வர்க வாசல் திறப்பவள், காசியையாளும், கருணை சுரக்கும் அன்னை அன்னபூர்ணை எனக்கு பி¬க்ஷ கொடுக்கலாமே.

7.உரிவீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ

நாரீநீலஸமான குந்தலதரீ நித்யான்னதானேச்வரீ

ஸாக்ஷ£ன் மோக்ஷகரீ ஸதாசுபகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II

பூமி உருவாக இருந்து எல்லா மக்களையும் காப்பவள். வெற்றி தருபவள். கருணைக் கடலாகிய அன்னையும் அவள். கருமையான குந்தலம் தரித்தவள். நித்யம் அன்னமளிப்பதில் வல்லவள். மோக்ஷம் அருளுபவள். எப்போதும் நன்மை பயப்பவள். காசீயையாள்பவள். கருணையுருவானவளே, அன்னையே, அன்னபூர்னேச்வரீ, எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

8.தேவீ ஸர்வ விசித்ர ரத்னருசிரா தாக்ஷ£யணீ ஸுந்தரி

வாமா ஸ்வாதுபயோதரா ப்ரியகரீ ஸெளபாக்யமாஹேச்வரீமி

பக்தாபீஷ்டகரீ ஸதாசுபயகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II

எல்லா (பற்பல) ரத்னங்களால் அழகிய தேவீ அவள், சற்றுக் கடுமையாக இருப்பினும் இனிய பால் சுரக்கும் அன்புக்குகந்தவள். ஸெளபாக்கியங்களை தன்வசப்படுத்தியவள் மட்டுமில்லை. பக்தர்களுக்கு (வேண்டியதை வாரி வழங்கும் காசீபுரத்து அரசி) க்ருபையை ஊன்றுகோலாக அமைத்துக் கொடுக்கும் அன்னை அன்னபூர்ணாம்பிகை எனக்கு பி¬க்ஷ கொடுக்கட்டும்.

9.சந்த்ரார் கானல கோடி ஸத்ரூசீ சந்த்ராம்சு பிம்பாதரீ

சந்த்ரார்காக்னி ஸமான குண்டலதரீ சந்த்ரார்க வர்ணேச்வரீ

மாலாபுஸ்தகபாச ஸாங்குசதரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II

சந்திரன், சூர்யன், அக்னி இவர்கள் கோடிக்கணக்கில் இருந்தால் அவர்கள் நிகராகலாம் என்றபடி இருப்பவளும், சந்திர கிரகணமும், கோவைப்பழமும் ஒன்று சேர்ந்தார் போன்ற உதட்டையுடையவளும், சந்திரன், சூர்யன், அக்னி இவரையத்த குண்டலம் அணிந்தவளும், சந்திரசூர்ய நிறம் வாய்ந்தவளும், மாலை, புஸ்தகம், பாசம், அங்குசம் இவற்றை கையில் கொண்டவளும், காசீபுரத்தின் அரசியுமான எனதன்னை அன்னபூர்னேச்வரீ தயவுடன் பி¬க்ஷயளிக்கட்டும்.

10.க்ஷத்ரத்ராரகரீ மஹாபயகரீ மாதா க்ருபாஸாகரீ

ஸர்வானந்தகரீ சிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீமி

தக்ஷ£க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II

க்ஷத்ரியருக்கு பாதுகாப்பு அளித்தவள், பெரும் பயத்தைப் போக்குபவள், கருணைக் கடலானவள், அனைவருக்கும் ஆனந்தமளிப்பவள், மங்களமளிப்பவள், விக்னேச்வரீ, செல்வியும் அவளே. மேலும் தக்ஷனை கதற வைத்தவள், நோய் தீர்ப்பவள். காசீ ராஜ்யத்தின் அரசியும் ஆவாள். அந்த அன்னை அன்னபூர்ணை பி¬க்ஷ தந்தருளட்டும்.

11.அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே I

ஜ்ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹிச பார்வதீ II

ஹே அன்னபூர்ணே, எப்பொழுதும் நிறைவானவளே, ஸ்ரீ சங்கரின் ப்ரியே. ஹே பார்வதீ, எனக்கு ஜ்யானம், வைராக்யம் உண்டாகும் வண்ணம் பி¬க்ஷ யருள்வாயாக.

12.மாதா ச பார்வதீதேவீ பிதா தேவோ மஹேச்வர: I

பாந்தவா:சிவபக்தா:ச ஸ்வதேசோ புவனத்ரயம் II

எனக்கு தாய் பார்வதீ, தந்தை மஹேச்வரன், சிவ பக்தர்களே உறவினர், மூன்று உலகுமே எனது ஊராகும்.

அன்னபூரணாஸ்துதி முற்றிற்று.