அறவழி வாசகம் ஆத்திசூடி 1 அறம் செய்ய விரும்பு 2 ஆறுவது சினம் 3 இயல்வது கரவேல் 4 ஈவது விலக்கேல் 5 உடையது வி

அறவழி வாசகம்

ஆத்திசூடி


1. அறம் செய்ய விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடையது விளம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண் எழுத்து இகழேல்

8. ஏற்பது இகழ்ச்சி

9. ஐயம் இட்டு உண்

10. ஒப்புர வொழுகு

11. ஓதுவது ஒழியேல்

12. ஒளவியம் பேசேல்

13. அஃகம் சுருக்கேல்

14. கண்டொன்று சொல்லேல்

15. ஙப்போல் வளை

16. சனி நீராடு

17. ஞயம்பட உரை

18. இடம்பட வீடிடேல்

19. இணக்கமறிந்து இணங்கு

20. தந்தை தாய்ப் பேண்

21. நன்றி மறவேல்

22. பருவத்தே பயிர் செய்

23. மண் பறித்துண் ணேல்

24. இயல்பு அலாதன செயேல்

25. அரவம் ஆட்டேல்

26. இலவம் பஞ்சில் துயில்

27. வஞ்சகம் பேசேல்

28. அழகலாதன செயேல்

29. இளமையில்கல்

30. அறனை மறவேல்

31. அனந்தலாடேல்

32. கடிவது மற

33. காப்பது விரதம்

34. கிழமைப்பட வாழ்

35. கீழ்மை அகற்று

36. குணமது கைவிடேல்

37. கூடிப் பிரியேல்

38. கெடுப்பது ஒழி

39. கேள்வி முயல்

40. கைவினை கரவேல்

41. கொள்ளை விரும்பேல்

42. கோதாட்டு ஒழி

43. சக்கர நெறி நில்

44. சான்றோர் இனத்து இரு

45. சித்திரம் பேசேல்

46. சீர்மை மறவேல்

47. களிக்கச் சொல்லேல்

48. சூது விரும்பேல்

49. செய்வன திருந்தச் செய்

50. சேரிடம் அறிந்து சேர்