துளசி (तुलसी कुलम्)


Latin Name                         –          Ocimum tenuiflorum Linn.
English Name         –          Holy basil, Sacred basil
Sanskrit Name       -           तुलसी, सुरसः
Tamil Name  -           காருத்துளசி, துளசி

Tulasi

துளசியை அறியாதார் இருக்க முடியாது. தோட்டங்களிலும் காடுகளிலும் உஷ்ணப்பாங்கான பூமிகளிலும் தானே வளர்ந்தும், பயிர் செய்யப்பட்டும், தெய்வமாகப் பூஜை செய்யப்பட்டும், தெய்வப்பூஜையில் சிறந்த சாதனமாகப் பயன்படுத்தப்பட்டும், தரித்து, முகர்ந்து, மென்று சாப்பிடப்பட்டும் ஒவ்வொரு இந்தியனுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ள தோட்டத்துப் பச்சிலையான துளசி நம் ஆரோக்கியத்திற்கு உகந்த பாதுகாப்பளிக்கும் மூலிகையாகவும் ஆகிறது. இயற்கைக்கு பூர்ணபக்கபலமாக நிற்பதே இதன் தனிப்பெருமை.
துளசியில் எத்தனை வகை? விளையும் நிலத்தையும் சூழ்நிலையையும் ஒட்டி நிறத்திலும் மணத்திலும் உருவிலும்தான் எத்தனை மாறுதல்கள்! எனினும் நமக்கு அதிகமாக எளிதில் கிடைப்பவை வெண்துளசியும், கருந்துளசியும்தான். மற்றும் துளசி இனத்தில் காட்டுத் துளசிப் பிரிவில் சேர்ந்த ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை)யும், ராமதுளசி (எலுமிச்சம்துளசி)யும், நமது பழக்கத்திலுள்ளவை.
வெள்ளைத்துளசியே அதிகமாக கிடைக்கும். இதன் இலை, தண்டு, காம்பு முதலியவை வெண்மை கலந்த பச்சை நிறத்துடனிருக்கும். துளசி என்ற பொதுப்பெயர் இதற்கே அதிகப் பழக்கத்திலுள்ளது. கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு முதலியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறத்துடனிருக்கும். இரண்டுக்கும் குணத்தில் அதிக வேற்றுமை இல்லை. மணற்பாங்கான உஷ்ணபூமியில் உஷ்ணதேசத்தில் விளைவதில் காரம் அதிகம். நீர்ப்பாங்கானவிடத்தில் குளிர்ந்ததேசத்தில் விளைவதில் காரம் சற்று குறைவு.
இறைவன் வழிபாட்டிற்கு உரியதாதலால் இதை பெரும்கண்ணியத்துடன் உபயோகிப்பர். திருமாலின் பிரசாதமாகவும், பித்ருக்கள் ஸன்யாஸிகள் இவர்களது பூஜைக்கு பிறகும் இதை உட்கொள்வதும், முகர்வதும், காதில் தரிப்பதுமுண்டு. துளசி பயிரான இடத்தில் உள்ள சூழ்நிலையே – காற்றும் தண்ணீரும் மண்ணுமே சுத்தமாகிவிடும். தன்னுடன் கலந்தவைகளை அழுகவிடாது. மலேரியா, இன்ப்ளூயன்ஸா முதலிய தொற்றுநோய்கள் பரவும்போது துளசியின் மணத்தை நுகர்ந்துகொண்டேயிருக்கும்படி சூழ்நிலையை அமைத்துக்கொண்டால் நோய் மற்றவருக்கு தொத்தாது. வந்த நோயின் கடுமையும் குறையுமென்பர்.
இதன் சுவை காரம் கலந்த கசப்பு. உடம்பில் கதகதப்பைப் பாதுகாக்கவும், குறைந்தால் அதிகரிக்கச்செய்யவும் திறமை படைத்தது. இந்தக் கதகதப்பும் காரமும் காரணமாக மார்பு தொண்டை முதலிய இடங்களில் கட்டி உபத்திரவிக்கும் கபத்தை இளக்கி வெளியேற்றும். கபமும் உமிழ்நீரும் அழுகி ஏற்படும் வாய் துர்நாற்றத்தைப் போக்கும். நாக்கில் சேரும் குழகுழப்பையும் பூச்சையும் இளக்கி வெளியேற்றி வாயில் சுரசுரப்பையும், நல்ல சுவையுணர்ச்சியையும் அளிக்கும். பசியைத் தூண்டி நல்ல ஜீர்ணசக்தியை அளிக்கும். குளிருடன் ஏற்படும் ஜ்வரம், மார்பில் கபக்கட்டுடன் ஏற்படும் இருமல், மூச்சுத் திணறல், நுரையீரலில் கபம் நீர் நிரம்பி ஏற்படும் விலாவலி, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றில் அஜீர்ணம், மார்பில் சளிக்கட்டு, தலையில் நீர்க்கோர்வை, இனந்தெரியாத வேதனையால் அழுகை, உடலை முறித்துக்கொள்ளுதல் முதலியவைகளில் அனுபானமாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பருவ மாறுதல்கள் தோறும் இன்ப்ளூயன்ஸா முதலிய விஷஜ்வரங்கள் மலேரியா முதலிய முறை ஜ்வரங்கள் இவைகள் பரவலாக ஏற்படும்போது, துளசிச் சாற்றை அடிக்கடி சாப்பிடுவது, துளசிபோட்ட வென்னீரைக் குடிப்பது, துளசியை அரைத்து வேதனையுள்ள இடங்களில் பூசுவது, துளசியை முகர்வது முதலியவை ஆச்சரியமான வகையில் வேதனையைக் குறைத்து நோயாளிக்கு மனத்தெம்பு ஊட்டுவதைக் காணலாம். உடலில் எப்பகுதியாவது அழுக ஆரம்பித்தாலோ, அழுகிக் கிருமிகள் உண்டானாலோ, துளசியைத் தொடர்ந்து உபயோகிக்க்க் கிருமிகள் உண்டானாலோ, துளசியைத் தொடர்ந்து உபயோகிக்கக் கிருமிகள் நசித்து அழுகல் நின்று புண் ஆறும். வயிற்றில் ஆகாரம் அழுகி ஏற்படும் கீரைப் பூச்சிகளையும் இது வெளியாக்கும். தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி இவைகளில் மேல் பூச மிகவும் நல்லது.
பச்சைத் துளசியைக் கசக்கிப் பிழிந்து சாறாகவோ, கஷாயமாகச் செய்தோ நிழலில் உலர்த்தித் தூளாக்கிக் கொண்டு சூர்ணமாகவோ, அதைக் கஷாயமாகவோ, டீயாகவோ செய்தும் உள்ளுக்குச் சாப்பிடலாம். துளசியைப் பச்சையாகவோ காய்ந்ததாகவோ அரைத்து மேல் பூசலாம்.

உபயோகமுறைகள் –

துளசியைச் சாறாகவோ, கஷாயமாகவோ முன்சொன்ன நோய்களில் கொடுக்கலாம். துளசிச் சாறு குழந்தைகளுக்கு ½ - 2 டீஸ்பூன், பெரியோர்களுக்கு ¼ - ½ அவுன்ஸ். சூர்ணம் குழந்தைகளுக்கு 2 – 4 சிட்டிகை, பெரியோர்களுக்கு ½ - 1 டீஸ்பூன். ஒரு பிடி துளசியை (சுமார் 2 தோலா.) நான்கு அவுன்ஸ் ஜலத்திலிட்டு, ஒரு அவுன்ஸ் மீதமாகக் காய்ச்சிய கஷாயத்தில் பெரியோர்கட்கு ½ - 1 அவுன்ஸும், சிறியோர்கட்கு 1 – 2 டீஸ்பூனும் கொடுக்கலாம்.
நோய்களில் அனுபவமுள்ள பெரியோர்கள் துளசியை நூற்றுக்கணக்கான முறைகளில் உபயோகிப்பர். சில முக்கிய முறைகளை மட்டும் கீழே தருகிறோம். குளிர், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி முதலியவைகளுடன் ஏற்படும் ஜ்வரங்களிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறை ஜ்வரத்திலும், யானைக்கால் ஜ்வரத்திலும் துளசியுடன் மிளகு சேர்த்து உபயோகிப்பர். ஜ்வரம் வரும் போலிருக்கும் போதே பத்து துளசி இலையையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட ஆரம்பநிலையிலேயே ஜ்வரம் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். ஜ்வரம் வந்தபின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம். துளசி, மிளகு, பழயவெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கழற்சிக்காயளவு தொடர்ந்து சாப்பிட்டு வர மலேரியா, யானைக்கால் ஜ்வரம் வராது. அவ்விதமே பத்து துளசியையும் ஐந்து அல்லது மூன்று மிளகையும் வாயிலிட்டு மென்று, தினமும் சாப்பிட்டு வரலாம். மிளகை துளசிச் சாற்றில் ஏழு அல்லது இருபத்தோரு  நாட்கள் ஊரவைத்து, பிறகு நிழலில் உலர்த்தி அதில் 5 – 10 மிளகுகள் சாப்பிட குளிர் ஜ்வரம், காணாக்கடி, முறைஜ்வரம் முதலியவைகள் நீங்கும். துளசி மிளகு இவைகளுடன் தும்பை இலையையும் சேர்த்துக் கஷாயமிட்டுச் சாப்பிட குளிர் ஜ்வரம், வாயுவால் ஏற்படும் குடைச்சல்வலி இவை நீங்கும். விஷஜ்வரங்கள் பரவும்போது இதைத் தடுப்பிற்காக உபயோகப்படுத்தலாம்.
துளசியுடன் மிளகுக்குப்பதில் ஓமத்தைச் சேர்த்துச் சாப்பிட வயிற்றில் அஜீர்ணத்தாலும், வாயுவாலும் ஏற்படும் பொறுமல், உப்புடம், வலி, அஜீர்ண பேதி, கீரைப் பூச்சிகள், பூச்சிகளால் ஏற்படும் பேதி, முதலியவைகளில் நல்ல குணம் கிடைக்கும். துளசியையும் ஓமத்தையும் சிறிது ஜலம் விட்டு அரைத்து ஸ்வரஸமாக்கியோ தேன் சர்க்கரை சேர்த்து உபயோகிக்கலாம். துளசி, ஓமம், பழைய வெல்லம் இம்மூன்றையும் சேர்த்து நன்கு இடித்து, சிறிது வெய்யிலில் காயவைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். சிசுக்களுக்கு ஏற்படும் வயிற்றுநோய்களிலும் கபக்கட்டிலும் இம்முறைகள் மிகவும் பயன்தரும். கபம் அதிகமாக இருக்கும்போது ஓரிரண்டு வெற்றிலையைக் கசக்கிப் பிழிந்த சாறும் சேர்த்துக் கொடுக்க நல்லது.
இதுமாதிரியே துளசியுடன் இஞ்சி சுக்கு திப்பிலி இவைகளில் ஒன்றைப் பக்குவப்படுத்தி எல்லா நிலைகளிலும் கொடுக்கலாம். துளசியையும் மருளையும் சாராகப் பிழிந்து சிறிது சூடாக்கிக் காதில் விட, காது நாற்றம், மந்தம், வலி இவை நீங்கும். துளசிச் சாற்றுடன் கிராம்புத் தூளும் கற்பூரமும் சேர்த்து, சொத்தையுள்ள பற்களிலும் ஈறு கொழுத்த இடங்களிலும் வைக்க வேதனை நீங்கும். துளசியை அரைத்து உடலில் பூசி சிறிது நேரத்திற்குப் பின் குளிக்க காணாக்கடி நீங்கும். துளசிச் சாற்றையும், எலுமிச்சம் பழச்சாற்றையும், கற்பூரமும் சேர்த்துத் தடவ தலையிலுள்ள பேன்களும், அரிப்பு, படை, தேமல், வரட்டுச் சொரி முதலியவைகளும் நீங்கும். கிராம்பையும் சுக்கையும் துளசியைக் காயவைத்துத் தூள் செய்து நஸ்யமாக இட மூக்கடைப்பு, தலைச்சளி, தலைவலி, தலைக் குடைச்சல் இவை நீங்கும்.
இவைகளைப் போல இன்னமும் எத்தனையோ உபயோகங்கள். அதைக் கைவைத்தியமாகப் பழகிய தலைமுறைகள் மறைந்து வருகின்றன.

सुरसा तुळसी कृष्णा चक्रपर्णी सुमञ्जरी।
भूतप्रिया नागमाता तुळसी सुरसाग्रणी॥
द्वितीया सुरसा गौरी श्वेता सुरभिमञ्जरी।
श्रीमञ्जरी भूतकेशी तुळसी सुरसाग्रणी॥ (मदननिघण्टु)
सुरसस्तुळसी सुरभी गौरी सुमञ्जरी कृष्णा।
बहुमञ्जर्यलसा श्री भूतघ्नी देव(दुन्दु)भिः सुरसी॥
अपेतराजसी चेति कथ्यतेऽरुचिपत्रिका।
विष्णुप्रिया नागमाता शब्दैः पर्यायवाचकैः॥
एतैरेवोच्यते गौरसुरसो नामकोविदैः।
नामभिर्गौरसंयुक्तैर्यथा स्यात् गौरमञ्जरी॥ (अ.म)
तुळसी सुरसा ग्राम्या सुलभा बहुमञ्जरी।
अपेतराक्षसी गौरी शूलघ्नी देवदुन्दुभिः॥ (भावप्रकाशिका)
तुळसी सुभगा तीव्रा पावनी विष्णुवल्लभा।
सुरेज्या सुरसा ज्ञेया कायस्था सुरदुन्दुभी॥
सुरभिर्बहुपत्री  च मञ्जरी सा हरिप्रिया।
अपेतराक्षसी श्यामा गौरी त्रिदशमञ्जरी॥
भूतघ्नी पूतपत्री च ज्ञेया चैकोनविंशतिः। (राजनिघण्टु)
सुगन्धा तिक्तकटुका कृमिकुष्ठप्रणाशिनी।
कासहिक्काश्वासहरा तुळसी विषनाशिनी॥ (मदननिघण्टु)
तुळसी कटुका तिक्ता हृद्योष्णा दाहपित्तकृत्।
दीपनी कुष्ठकृच्छ्रास्रपार्श्वरुक्कफवातजित्॥
शुक्ळा कृष्णा च तुळसी गुणैस्तुल्या प्रकीर्त्तिता। (भावप्रकाशिका)
तुळसी लघुरुष्णा च रूक्षा कफविनाशिनी।
कृमिदोषं निहन्त्येषा रुचिकृत् वह्निदीपनी॥ (धन्वन्तरिनिघण्टु)
तुळसी कटुतिक्तोष्णा सुरभिः श्ळेष्मवातजित्।
जन्तुभूतकृमिहरा रुचिकृद्वातशान्तिकृत्॥ (राजनिघण्टु)
श्वेता कृष्णा च तुळसी कटूष्णा चोषणा जगुः।
दाहपित्तकरी हृद्या तुवरा ह्यग्निदीपिका॥
लघ्वी वातकफश्वासकासहिध्माकृमीन् जयेत्।
वान्तिदौर्गन्ध्यकुष्ठानि पार्श्वशूलविषापहा॥
मूत्रकृच्छ्रं रक्तदोषं भूतबाधां च नाशयेत्।
शूलं ज्वरं च हिक्कां च नाशयेदिति कीर्त्तिता॥ (निघण्टुरत्नाकरः)
तुळसी पित्तकृत् वातकृमिदौर्गन्ध्यनाशिनी।
पार्श्वशूलारतिश्वासकासहिक्काविकारजित्॥ (राजवल्लभः)
तुळसी तुवरा तिक्ता तीक्ष्णोष्णा कटुपाकिनी।
रूक्षा हृद्या लघुः कट्वी दाहपित्ताग्निवर्धनी॥
जयेद् वातकफश्वासकासहिध्मावमिकृमीन्।
दौर्गन्ध्यपार्श्वरुक्कुष्ठविषकृच्छ्राश्मदृग्गदान्॥ (कैय्यदेवनिघण्टु)
തുളസീ കച്ചെരിച്ചുള്ളൂ രൂക്ഷം തീഷ്ണം കഫാവഹം।
കൃമിദോഷനിഹന്ത്രീ ച രുചിദാ വഹ്നിദീപനീ॥ (ഗുണപാഠം)

 

Based on the land and region there are many varieties of tulasi. However white and black variety is commonly available plants. The tulasi by name Rudirasadai and rama tulasi belong to wild variety. Tulasi has pungent and bitter taste. It has the ability to maintain the warmthness of the body and when it decreases, tulasi can increase it. Due to this property it can liquefy the solid flame which is accumulated in chest and in the throat. The putrefied smell emanating from oral cavity due to phlegm and saliva getting spoiled can be removed by tulasi. The slimy nature of the mouth can be scraped off by tulasi and it induces the taste bud to open. It kindles the gastric fire. Problems like influenza, malaria etc can be warded off by drinking tulsi boiled water and acts as analgesic when applied as paste on that particular area. The worms which are crawling in a wound can be destroyed   by sprinkling tulasi as a dusting powder. The intestinal worm produced due to food getting spoiled in intestine will all removed by consuming tulasi leaves.
For children ½ to 2 tsf, for adult ¼ - ½ ounce of the decoction prepared out of tulasi cures many diseases like itching of the skin and other cold diseases. The preparation of the decoction is one handful of tulasi leaves boiled in 250 ml of water and reduce to 60 ml. In elephantiasis when a person has fever, tulasi with pepper cures it. In fever with heaviness of body 10 tulasi leaves with 5 peppers when taken orally will pacify these complaints. Tulasi , pepper and jaggery when powdered and taken in morning in empty stomach (1 tsf) continuously the malarial fever can also be controlled. If tulasi is taken along with drone leaves and pepper one can get relieved from muscular pain.  Tulasi with omam cures indigestion, gas in the intestine, abdominal pain, and loose motion due to indigestion and worms. The cold for children can get cured by taking the juice extract of beetle leaves along with tulasi. Clove, camphor, with tulasi extracted juice when kept on tooth decay, cures it and pacify pains also. Tulasi juice along with lemon juice and camphor when applied on head the problems like lice, itching, and will all get cured. Clove along with dry zinger ground with tulasi juice applied on forehead, headache gets cured. Power of tulasi when taken as snuff powder, nose block, phlegm on head and headache will get cured.

 

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்