வேளைதோறும் ஐந்து நிமிஷம் வேண்டுதல்

வேளைதோறும் ஐந்து நிமிஷம் வேண்டுதல்

அதனால் இன்றிலிருந்து தினமும் இரண்டு வேளை ஐந்து ஐந்து நிமிஷம் ஸ்வாமியை அம்மையப்பனாக நினைத்துப் பிரார்த்தனை பண்ணுங்கள். “நான் கெட்ட வழி போகக்கூடாது. எனக்கு நல்ல புத்தி தா” என்று அன்போடு சந்தோஷமாகப் பிரார்த்தனை பண்ணுங்கள். இதனால் நல்ல மனம், உறுதியான புத்தி, படிப்பிலே பாஸ், பிறகு உயர்ந்த உத்தியோகம், பிறர் எல்லாருக்கும் உபகாரமான நல்ல வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு ஏற்படட்டும்.