பதிவிரதமும், குருவிரதமும்

பதிவிரதமும், குருவிரதமும்

"குரு என்றால் அவரிடமே தன்னைப் பூர்ணமாக ஒப்புக்கொடுத்துவிட்டு சரணாகதி என்று கிடக்க வேண்டாமா? பல பேரிடம் அந்த மாதிரித் தன்னைப் பிய்த்துப் பிய்த்துக் கொண்டு முடியுமா? சரணாகதியைப் பங்கு போட்டுக் கொடுக்க முடியுமா? ... சொல்ல ஸங்கோசமாகத் தானிருக்கிறது, ஆனாலும் சொல்கிறேன்.. பல பதிகளிடம் ஒருத்தி பாதிவ்ரத்யத்துடன் (கற்புடன்) இருக்க முடியும் என்றால் எப்படி? அப்படித்தானே ஒருத்தனுக்கே பல குரு என்பதும்?" என்றிப்படிக் கேட்பதுண்டு.

ஒரே குரு என்று சரணாகதி பண்ணிவிட்டால் ரொம்ப ரொம்ப ஸரிதான். ஆனால் அப்படிப் பண்ணாததால் பதிவ்ரதத்திற்கு தோஷம் என்கிறாற்போல குருவ்ரதத்திற்கு தோஷம் என்றாகாது. ஒரு ஸ்த்ரீக்கு அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், மாமனார், மாமியார், பிறந்தகத்து - புக்ககத்து பந்துக்கள், பரம ப்ரியமான அவளுடைய ஸொந்தக் குழந்தைகள் என்று பல உறவுக்காரர்கள் இருக்கவில்லையா? ஒரு உத்தம ஸ்த்ரீ அந்த எல்லாரிடமும் ப்ரியாமாயிருந்து கொண்டு அவர்களுக்குச் செய்யவேண்டியதையெல்லாம் நன்றாகச்செய்வான். ஆனாலும் பதி என்ற உறவு தனிதானே? அவனிடந்தானே அவள் சரணாகதி என்றே கிடப்பது?

பல உறவுக்காரர்கள் மாதிரி பல குருக்கள் அவர்களிலே பதி மாதிரி முதல் ஸ்தானம் வஹிக்கிறவராக ஒருத்தர் - 'முக்ய குரு' என்று வித்யாரண்யாள் சொன்னவர். அவரொருவரிடந்தான் சரணாகதி என்பது பிய்த்துப் பிய்த்துப் பல பேரிடம் இல்லை.

மற்ற பந்துக்களிடமும் ப்ரியம் மாதிரி எல்லா குருக்களிடமும் மரியாதை, பக்தியான ப்ரியம். அதனால் மாமனார் - மாமியார் முதலியோருக்கும் ஒரு vFg கீழ்ப் படிகிறது போல இவர்களுக்கெல்லாமும் கீழ்ப்படிந்து நடப்பது.

கோவிலில் அநேக ஸந்நிதிகளில், ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வாமி. அகத்துப் பூஜையிலும் ஆதி சாஸ்த்ரங்கள் சொல்லி, அப்புறம் ஆசார்யாளும் புத்துயிரூட்டிக் கொடுத்த பஞ்சாயதன பூஜையில் ஐந்து ஸ்வாமி. எல்லாவற்றிடமுமே தான் பக்தி என்றாலும் இஷ்ட தெய்வம் என்று ஒன்று, அதனிடமே சரணாகதி என்று இருக்கோல்லியோ? அந்த மாதிரி பல குருமார்களிடம் பக்தி செலுத்திக் கொண்டே முக்ய குருவாக ஒருவரிடம் மட்டும் ஆத்ம ஸமர்ப்பணம்.

ஏன் பல குரு வருகிறார்கள் என்றால், பரலோகத்துக்கு வழி சொல்லித் தரும் வித்யையிலேயே பல கிளைகள் இருக்கின்றன. ஆத்ம சாஸ்த்ரம் என்ற ஒன்றுக்குள்ளேயே உபாஸனை என்ற branch -குள் எத்தனை branch -கள் என்பதற்கு சாந்தோக்யம் ஒன்றைப் பார்த்தால் போதும். இப்படி அநேக கிளை சாஸ்த்ரங்கள், வித்யைகள் இருப்பதில் ஒவ்வொரு குரு ஒவ்வொன்றில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருப்பார். நமக்கு அகத்து டாக்டர் என்று ஒருத்தர், அவர் சொல்லியே பல ஸ்பெஷலிஸ்ட்களிடமும் போவது என்று இருக்கிறதோ இல்லையோ? அப்படி ஒரு முக்ய குரு, அநேக உபகுருமார்கள்.

க்ளாஸ் வாத்யர் என்றே ஒருத்தர் இருக்கிறார். அவர் இங்க்லீஷோ,

கணக்கோ எடுக்கிறார். ஸெகண்ட் லாங்க்வேஜுக்கு வேறே ஒரு வாத்யார்,

ஹிஸ்டரி, ஜாகரஃபி, ஸயன்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தர் என்று வருகிறார்களோல்லியோ!முக்ய குரு - க்ளாஸ் வாத்யார், உபகுருமார் - வேறே ஸப்ஜெக்ட்கள் எடுக்கிற வாத்யார்கள்.

வேறே விதமாகவும் உண்டு, இங்கே வாய்ப்பாட்டு வித்வானம் பக்க வாத்தியங்களும் மாதிரி முக்ய குருவும், உபகுருக்களும். முக்ய குரு சொல்லிக் கொடுக்கிற ஸப்ஜெக்டே நமக்கு நன்றாக ஏறிப் பூர்ணமாக ஆகும்படி போஷித்துக் கொடுப்பவர்களாக உபகுருமார். பக்க வாத்யக்காரர்களில் ஃபிடில்காரர் அதே ராகம், பாட்டு தாளத்துக்குத்தான் வாசிக்கிறார். ம்ருதங்கக்காரர் அதே தாளத்துக்குத்தான் வாசிக்கிறார். அது வாய்ப்பாடகர் பாடுவதற்கு இன்னும் சோபை தந்து கான ரஸத்தை பூர்த்தி பண்ணி நமக்குள்ளே ஏற்றுகிறது. அப்படி முக்ய குருவின் ஸப்ஜெக்டைப் பண்ணித்தர உபகுருமார்.

உபகுருமார்களின் உபதேசத்தோடு கலந்து கலந்து எடுத்துக் கொள்ளும்படியாகவே முக்ய குருவின் உபதேசங்கள் இருப்பதுண்டு. முக்யமாக சாதத்தை வைத்துக்கொண்டு அதோடு போட்டுக்கொள்ள, தொட்டுக்கொள்ள அநேக வ்யஞ்ஜனக்ஙள் மாதிரி! (சிரித்து) நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடும்படியாக எள்ளுகாய்ப் பொடியும் கொத்ஸும் இருந்தாலும் 'ஸாது' இட்லிதான் 'மெய்ன்' என்கிற மாதிரி ஒரே சாந்தமாக, ஸிம்பிளாக முக்ய குரு மூல தத்வத்தை உபதேசித்து -வாயில் உபதேசம் என்று பண்ணுவதேகூட இங்கே குறைவாக இருக்கலாம். அப்படிப் பண்ணி -நம்முடைய அபக்வ ஸ்திதியில் அது உள்ளே போகாததால் விவரமாக சாஸ்திரங்களிலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கேட்டுக்கொண்டு அதோடு இதைக் கலந்தாலே உள்ளே போவதாகவும் உண்டு.

ஒருத்தருக்கு முக்ய குருவாக இருப்பவரே இன்னொருத்தருக்கு உபகுருவாக இருக்கலாம். நமக்கு ஜாகரஃபி வாத்தியாராக மாத்திரமே இருப்பவர் வேறே பசங்களுக்கு க்ளாஸ் வாத்யாராக இருக்கலாமோல்லியோ ஆகையினாலே, ஒருத்தனுடைய முக்ய குருதான் பெரியவர், உபகுரு அவ்வளவுக்கில்லை என்று இருக்கணும் என்றில்லை.

ஆகக்கூடி, குருவிடம் சரணாகதி அவச்யந்தான். பதிவ்ரதாபங்கம் மாதிரி குருவ்ரத பங்கம் ஏற்படாமல் ஆத்மாவை அவரிடமே அபின்னமாக - பிய்த்துப் பிய்த்து இல்லாமல் அபின்னமாக - அர்ப்பணிப்பது என்பது அத்யாவச்ய்ந்தான். ஆனால் அப்படி குரு என்று இருப்பவர் முக்ய குரு என்பவராக இருந்து, வேறே உபகுருமாரும் இருக்கலாம். இருந்தால் தப்பேயில்லை.

சில ஸமயத்தில் என்ன ஆகிறதென்றால் - அபூர்வமாக இப்படி ஆகிறது. ஆனால் நிச்சயமாக ஆகிறது, என்ன ஆகிறதென்றால் - ஒருவரிடம் அவரே ஆத்ம ரக்ஷகர் என்று பரிபூர்ணமாக நம்பி சரணாகதி செய்து நன்றாக முன்னேறுகிற ஒருவரே கூட, உபகுரு என்று புதிசாக வேறே யாரிடமும் எள்ளவும் உபதேசம் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதபோதிலும், உபகுரு என்ற அளவுக்கு மாத்திரமில்லாமல் இந்த முக்ய குருவுக்கு ஸரிஸமானராகவே இன்னொருத்தரை ஆச்ரயிக்கும்படியும் ஆகிறது. இப்படிப்பட்டவர்கள் இரண்டு பேரையும் முக்ய குருவாகவே பூஜித்து, பக்தியில் இரண்டு பேரிடமும்

கொஞ்சங்கூட ஏற்றத்தாழ்வில்லாமல் இருந்துகொண்டிருப்பார்கள்.

இங்கே முக்யமான விஷயம், அவர் (இப்படிப்பட்ட சிஷ்யர்) அந்த இரண்டு பேரிடமும் (குருமாரிடமும்) மற்றவரைப் பற்றி ஒளிக்காமல் சொல்லி அவரும் அறிந்தே, ஸம்மதித்தே, ஆசீர்வாதம் பண்ணியேதான் இரட்டை குருக்களாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது.

அப்படி இல்லாவிட்டால் அங்கே குரு வஞ்சனை குரு த்ரோஹம் வந்துவிடும்.

அப்படியில்லாத கேஸாகத்தான் சொல்கிறேன். இப்படியும் அபூர்வமாக நடக்கின்றன. தன்னிடமே சரணாகதனாக இருக்கிற ஒரு சிஷ்யனிடம் அந்த குருவேகூட இன்னொருத்தரைச் சொல்லி அனுப்பி வைப்பதாகக்கூட உண்டு.

ஏதோ அபூர்வமான பூர்வ ஸம்ஸ்காரம் காரணமாகத்தான் இப்படிச் சிலபேருக்கு நடப்பதாக இருக்கவேண்டும்.

"ஸரி, ஆனால் சரணாகதியை எப்படிப் பிச்சுப் பிச்சு இரண்டு பேர்கிட்ட குருவ்ரதம்?"

இது வெளி ஆள் கேட்கிற கேள்வி. ஆனால் ஸம்பந்தப்பட்ட ஆஸாமிக்கு - சிஷ்யனுக்கு - அவனுக்கு மாத்திரமில்லை, மூன்று ஆஸாமிகளுக்கு - அந்த சிஷ்யன் அவனுடைய அந்த ஸம ஸ்தான குருக்கள் இரண்டு பேர் என்ற மூன்று ஆஸாமிகளுக்கும் இந்தக் கேள்வி எழும்புகிறதேயில்லை!

அங்கே அந்த இரண்டு குருக்களுமே சேர்ந்து ஒன்றாக - ஒருத்தராகத்தான் - இருப்பார்கள். அதெல்லாம் அநுபவத்தினாலே தெரியவேண்டிய விஷயம். ஸம்பந்தப்பட்ட ஆஸாமிக்கு அப்படி நன்றாகவே தெரிகிற விஷயம். பிறத்தியாருக்கு 'ஏன், எப்படி?' சொல்லி புரியவைக்க முடியாது.

ஈச்வரனும் அம்பாளும் ஒன்றாகவே சேர்ந்து அர்த்த நாரீச்வரர் என்றே ஒரே மூர்த்தியாக இருக்கிறதோ இல்லையோ?

ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்திரர்கள் மூன்று பேரும் சேர்ந்து த்ரிமூர்த்தி என்றே மூர்த்தி உண்டோ இல்லையோ?

இங்கேயெல்லாம் (இவ்விரு மூர்த்திகளிடம்) பரம பக்தர்களாக சரணாகதி செய்து ஸித்தி கண்ட பெரியவர்கள் இருந்திருக்கிறார்களே!அவர்கள் பிய்த்துப் பிய்த்தா சரணாகதி பண்ணினார்கள்? ஐகாந்திக வ்ரதத்திற்கு (ஒரே நெறிக்கு) பங்கமா பண்ணினார்கள்? பண்ணியிருந்தால் அவர்கள் ஸித்திகண்டே இருக்க முடியாதே!

இந்த சிஷ்யர்களிடம் வேறே வேறே குருமார்கள் என்ற இடறலே மனஸில் கொஞ்சங்கூட இருக்காது. ஒரே பதி, அதே பதி வெவ்வேறே 'ட்ரெஸ்'ஸில் இருக்கிற மாதிரி ஒரே பரமாநுக்ரஹம், ஒரே உத்தாரண சக்திதான் வெவ்வேறே மநுஷ்ய - ரூப 'ட்ரெஸ்' போட்டுக் கொண்டிருப்பதாகவே அவர்களுக்குத் தெரியும். ஒரே லக்ஷ்யத்துக்கு மூர்த்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட பேர், Goal ஒன்றே, அதிலே சேர்ப்பிக்கிற ஆள் வெவ்வேறான ரூபத்திலே என்று தெரியும்.

வேறே வேறே குருக்கள் சொல்வதில் ஒருத்தர் சொல்கிறபடி பண்ணுவது மற்றவர் சொன்னதற்கு விரோதமாக ஆனால் அப்போதுதான் இடறல் வருவது. நாம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அப்படி ஆகவே ஆகாது. இரண்டு

பேரும் சொல்வது ஒன்றாகவேயோ, ஒன்றையன்று இட்டு நிரப்பிப் போஷித்துக்

கொண்டோ, அல்லது பக்குவ ஸ்திதியில் ஏறுமுகமாக ஒன்றை முடித்து இன்னொன்றுக்குப் போவதாகவோதான் இருக்கும்.

(ஸாதனை) வழியிலும் கொஞ்சங்கூட இடறல் இருக்காது, மனஸிலும் துளிக்கூட இடறல் - உறுத்தல் - இருக்காது. 'வஞ்சனையோ, த்ரோஹமோ, திருட்டுத் தனமோ பண்ணுகிறோமோ?' என்று உறுத்தாது. 'ஃப்ரீயாக, ஆனந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட குருமாரிடம் போய்க்கொண்டிருப்பான்.

உபநிஷத்துக்களைவிட நமக்கு ப்ரமாணமில்லை. அதிலே இப்போது நாம் பார்த்ததில், க்ராமம் க்ராமமாக வழிகாட்டியவர்களைப் பல குருமார் என்று உபமேயமாக எடுத்துக்கொண்டது மட்டுமில்லை. உபநிஷத்துக்களிலே வருகிற ஸாக்ஷ£த் பாத்ரங்களில் பல பேரே பல குருமார்களிடம் போனதாகவும் நிறையப் பார்க்கிறோம்!

மேற்படி கந்தார தேச உபமானக் (உவமைக்) கதை எவனுக்கு உபதேசிக்கப்பட்டதோ அந்த ப்ரஹ்மசாரிப் பையன் ச்வேதகேது என்பவனே பல குருக்களிடம் உபதேசம் பெற்றுக் கொண்டவன்தான்

இங்கே முதலிலே முக்ய குரு, அப்புறம் பல உபகுருமார் என்று இல்லாமல் முதலிலே பல பேரிடம் கற்றுக்கொண்டுவிட்டு அப்புறம் முக்ய குருவிடம் வந்து சேர்வதாக இருக்கிறது. பிதாவான உத்தாலக ஆருணியே தான் அப்படி முக்ய குரு ஆகிறவர். முன்னே நாம் பார்த்த பிதா - குரு 'ஈக்வேஷன்'!

அவன் பல பேரிடம் படித்துவிட்டுப் பிதாவிடம் திரும்பி வருகிறான். அவர் ஆத்ம ஸம்பந்தமாக ஒன்று சொல்லி, அது அவனுக்குத் தெரியுமா என்று கேட்கிறார்.

அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்போது அவன், "என்னுடைய குருமார்களுக்கு - 'பகவந்த:' என்று பஹ§வசனத்தில் சொல்கிறான் - இந்த ஸமாசாரம் தெரியாமலிருக்கணும். தெரிஞ்சிருந்தா எனக்குச் சொல்லிக் குடுக்காம இருந்திருக்கமாட்டா" என்று சொல்வதாக உபநிஷத்தில் இருக்கிறது.

இன்னும் அநேக இடங்களிலும் உபநிஷத்துக்களில் இப்படி ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார் இருந்ததைக் காட்டியிருக்கிறது.

அதில் இரண்டில், வேடிக்கையாக, ஆசார்யர் உபதேசிக்காமல் சோதித்தபோது திவ்ய சக்திகள் இரண்டு சிஷ்யர்களுக்கு விசித்ரமான உபதேசித்ததையும், அப்புறம் அதைஅந்த சிஷ்யர்களிடமிருந்தே தெரிந்துகொண்ட ஆசார்யர் தாமும் 'கன்ஃபர்ம்' பண்ணிக் கொடுத்ததையும் கதையாகச் சொல்லியிருக்கிறது.

ஒருத்தன் முன்னே பார்த்த ஸத்யகாம ஜாபாலன். குருவின் உத்தரவுப்படி அவன் பாட்டுக்கு அவருடைய பசுக்களை வைத்துக்கொண்டு தனியே போய் இருந்துகொண்டு, அவற்றை மேய்த்து, சினைக்கு விட்டுக்கொண்டு காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தான். அவர் பாடம் சொல்லித் தருகிற பாடாக இல்லை. அவனை அப்படிச் சோதனை பண்ணிக் கொண்டிருந்தார். அவனும் பொறுமையாகவே இருந்தான்.

தன்னிடம் அவர் கொடுத்திருந்த பசு மந்தையை அவன் ஆயிரமாகப்

பெருக்கி முடித்த பிற்பாடு குருகுலத்துக்குத் திரும்புகிறான். அதற்கு மேல் பொறுக்க

முடியாமல் அந்த மந்தையிலிருந்த ரிஷபம் ஒன்றே அவனுக்கு ஒரு உபதேசம் கொடுத்தது. மறுதினம் அவன் அக்னி உபாஸனை செய்யும்போது அந்த அக்னி ஒரு உபதேசம் கொடுத்தது. அதற்கடுத்த நாள் ஒரு ஹம்ஸமும், முடிவாக நாலாம் நாள் மத்கு (Madgu) என்கிற ஜலத்தில் வஸிக்கும் ஒரு பக்ஷியும் உபதேசங்கள் கொடுத்தன. திவ்யசக்திகள்தான் இப்படியெல்லாம் உபதேசித்து அதையே அப்புறம் குரு - ஹாரித்ருமத கெனதமர் -அங்ககீகாரம் பண்ணித் தம் வாயால் உபதேசித்து உறுதிப்படுத்திக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்தாற்போலவே (சாந்தோக்யத்தில்) வரும் கதையில் இந்த ஸத்யகாம ஜாபாலரே குருவாகி, தம்முடைய சிஷ்யனான உபகோஸலனை இதே மாதிரி சோதிக்கிறார். பன்னிரண்டு வருஷம் அவன் குருகுலவாஸம் செய்தபோதிலும், மற்ற சிஷ்யர்களுக்கு மாத்திரம் அவர் வித்யாப்யாஸம் பண்ணி, பூர்த்தியும் ஆக்கி, அகத்திற்குத் திருப்பி அனுப்பிவைத்துவிட்டு, அவனுக்கு ஒன்றும் செய்யாமலிருந்து விடுகிறார். மனஸொடிந்து போன அவனுக்கு குரு உபாஸிக்கும் மூன்று அக்னிகளுமே உபதேசம் பண்ணி விடுகின்றன. அப்புறம் அவரும் ஸந்தோஷமாக அதற்கு முத்ரை குத்திக் கொடுத்து, ஆனாலும் அக்னிகள் அவன் ஆசைப்பட்ட ப்ரஹ்ம வித்யையில் ஏதோ கொஞ்சந்தான் சொல்லித் தந்தன என்றும், தாம் முழுக்கச் சொல்லித் தருவதாகவும் சொல்லிப் பெரிசாக உபதேசம் ஆரம்பிக்கிறார்.

இதெல்லாம் 'பல குருமார்' என்ற தலைப்பின் கீழ் அஸலே வராது என்று சில பேருக்குத் தோன்றுலாம். ஆனால் குரு சோதித்துச் சோதித்துச் சொல்லித் தருவது, அப்போதும் சிஷ்யன் ஸஹித்துக் கொண்டு பணிவிடை பண்ணிக்கொண்டு அவரிடம் பக்தி ச்ரத்தையுடனேயே இருப்பது, தன்னுடைய வித்யா லக்ஷ்யத்திற்காகவும் தபித்துக் கொண்டிருப்பது - ஆகிய விஷயங்கள் இவற்றிலிருந்து தெரியவருகின்றன. அதனால் நம் 'டாபிக்'குக்கு ஸம்பந்தமானவைதான்.

அஸலே ஸ்தூலமான மநுஷ்ய ரூபத்திலேயும் அநேக குருமாரிடம் ஒருத்தரே உபதேசம் பெறுவதற்கும் உபநிஷத்துக்களில் யதேஷ்டமாக 'எவிடென்ஸ்' இருக்கிறது.

கீதையிலேயும் பகவான் 'உபதேஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்நாநிந: தத்வ - தர்சிந:' என்பதாக பஹ§வசனத்திலேயே "தத்வத்தை அநுபவித்தறிந்தவர்களான ஞானிகளிடம் போய் நமஸ்காரம் பண்ணி, தொண்டுகள் செய்த, அலசி அலசித் தத்வத்தைக் கேட்டுக்கொள். அவர்கள் உனக்கு ஞானோபதேசம் கொடுப்பார்கள்" என்கிறார். கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு குருவாக இருந்துகொண்டு உபதேசிக்கிறபோதே, இப்படி மற்ற உபகுருக்களும் அவனுக்கு உண்டு என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்!

அவருக்குமே இப்படிப் பல குருமார் இருந்துதானிருக்கிறார்கள். யதுவம்சக் குலகுரு கர்காசார்யர். அவர்தான் பகவானுக்கு உபநயனம் செய்த குரு. பகவான் வித்யாப்யாஸம் என்று குருகுலவாஸம் யதோக்தமாகப் பண்ணினது ஸாந்தீபனி என்கிற குருவிடம். தேவகீ புத்ரனாக அவர் தம்மைத் தெரிவித்துக் கொண்டு,

கோர ஆங்கீரஸ் என்ற ரிஷியிடம் உபதேசம் பெற்றுக் கொண்டதாகவும் நாம்

சாந்தோக்யக் கதை பார்த்தோம்.

தத்தாத்ரேயரையும் உதாஹரணம் பார்த்தோம். இருந்தாலும் அவர் அந்த இருபத்து நாலு பேரிடம் உபதேசம் என்று வாஸ்தவத்தில் பெறாமல், தாமே அந்த இருபத்துநாலில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு படிப்பினைஎடுத்துக்கொண்டதோடு ஸரி என்பதால் அவர்களை அவருக்கு குரு என்பது ஒளபசாரிகந்தான் (உபசாரத்திற்குச் சொன்னதுதான்) என்று வைக்கவும் ந்யாயமுண்டு.

ஆனாலும் அவர் நம் 'டாபிக்'குக்கே பலம் கொடுப்பதாகவும் நேராக ஒன்று அந்த உபாக்யான முடிவில் சொல்லியிருக்கிறார்.

ந ஹ்யேகஸ்மாத் குரோர் - ஜ்ஞாநம் ஸுஸ்திரம் ஸ்யாத் ஸுபுஷ்களம் 1

'பூர்ணமாகவும்,உறுதியாகவும் ஒரே குருவிடமிருந்து ஞானம் ஸம்பாதிக்க முடியாமல் ஆகலாம்' என்று அர்த்தம். இது அவருடைய ஜெனரல் ஸ்டேட்மென்ட் - எல்லாருக்குமாகச் சொன்னது.

இப்படி ச்லோகத்தின் முன்பாதியில் சொல்லிவிட்டு, பின்பாதியில் நம் வேதாந்த மதத்தின் பரந்த, விசாலமான கோட்பாட்டைச் சொல்கிறார்:"ப்ரஹ்மைதத் அத்விதீயம் வை கீயதே பஹ§தர்ஷிபி:." "இரண்டாவது அற்றதான அந்த ஒரே ப்ரம்மந்தான் அநேக ரிஷிகளாலும் அநேக விதமாகப் பாடப்படுகிறது, அதாவது உபதேசிக்கப்படுகிறது" என்று அர்த்தம். 'ஒரே ஸத்வஸ்து, அதைத்தான் விப்ரர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள்' என்ற ப்ரஸித்தமான வேத வாக்யத்தை அநுஸரித்துச் சொன்ன வாக்யம்.

நமக்கு விஷயம், ஒரே குருவால் ஒருத்தனுக்குப் பூர்ண ஞானம் ஏற்படாமற் போகலாம் என்பது. அப்படிச் சொன்னால் வேறே குருமாரிடமும் போகலாம் என்று தானே அர்த்தம்?

நம்முடைய (அத்வைத) ஸம்ப்ரதாயத்தின் ஆதி ப்ரவர்த்தகர்களிலேயே ஒருத்தர் தத்தாத்ரேயர். காமாக்ஷியம்பாள் கோவிலிலிருக்கும் ஆசார்யாள் ஸந்நிதி விமானத்தில், பூர்வாசார்ய பரம்பரையில் வந்த அத்தனை பேருக்கும் பிம்பங்கள் இருக்கின்றன. அதிலே எல்லாருக்கும் மேலே 'டாப்'பில - 'தக்ஷிணாமூர்த்தி'யா என்றால் இல்லை. (நம்முடைய குருபரம்பரா) ச்லோகம் 'நாராயணம், பத்மபுவம்' என்று ஆரம்பிக்கிறதே, அந்த நாராயணா என்றால் அவரும் கீழ் வரிசைதான். 'டாப்'பில் இருக்கிறவர் தத்தாத்ரேயர்தான் அவருடைய வாக்கு என்றால் அதற்கு கனம் ஜாஸ்திதான்.

அதைவிடவுங்கூட... நமக்கு (சிரித்து) சீஃப் ஜஸ்டிஸ் யார்? ஆசார்யாள்தானே? அவர் வாக்கிலேயே பல குருமாரைக் கொண்ட ஒருவரை ச்லாகித்துச் சொல்கிறாரென்றால் அதற்கு மேல் நமக்கு ஒன்றும் வேண்டாம் தானே? 'அப்படி ஏதாவது இருக்கா?' என்றால் இருக்கு.

ப்ருஹதாரண்யகத்தில் ஒவ்வொரு ஸெக்க்ஷனுக்கும் 'ப்ராஹ்மணம்' என்று பெயர் கொடுத்திருக்கும். 'வம்ச ப்ராஹ்மணம்' என்று (இவ்வுரை) நடுவே சொன்னது ஞாபகமிருக்கலாம். (சிரித்து) மறந்தும் போயிருக்லாம்!... அப்படி 'ஷடாசார்ய ப்ராஹ்மணம்' என்றே ஒன்று இருக்கிறது, அர்த்தம் புரிகிறதா? 'ஆறு

ஆசார்யர்களைப் பற்றிய ப்ராஹ்மணம்' என்று அர்த்தம். ஒருத்தருக்கே அப்படி ஆறு ஆசார்யர்கள். அந்த ஒருத்தர் ஸாமான்யமானவர் இல்லை. ராஜரிஷி,

ராஜரிஷி என்றே ஸ்தோத்ரிக்கப்படும் ஜனகர்தான் அவர். ஒரு பெரிய ராஜாவுக்குரிய அத்தனை கார்யங்களும் செய்து கொண்டே உள்ளுக்குள்ளே ஸமாதி நிலையிலிருந்தவர் அவர். கர்மயோகிகளுக்கு 'எக்ஸாம்பி'ளாக க்ருஷ்ண பரமாத்மாவே அவரைத்தான் சொல்லியிருக்கிறார்.

ஜித்வர், உதங்கர், பர்க்கு என்றிப்படி ஆறு பேர் - அம்மா பேரில் கோத்ரம் பெற்ற ஸத்யகாம ஜாபாலர் கூட அவர்களில் ஒருத்தர், இப்படி ஆறு ஆசார்ய புருஷர்களிடம் தாம் பெற்ற உபதேசம் பற்றி அந்த ப்ராஹ்மணத்தில் ஜனகர் யாஜ்ஞவல்கியரிடம் சொல்கிறார். அப்புறம் இப்போது ஏழாவது ஆசார்யராக யாஜ்ஞவல்கியரிடமும் உபதேசம் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிறார்.

அவர் ஏதோ பண்ணப்படாததைப் பண்ணினதாக யாரும் நினைக்கவில்லை. அவர் பண்ணினதை யாஜ்ஞவல்க்யர் ச்லாகித்ததாகவே ஆசார்யாள் பாஷ்யத்திலிருந்து தெரிகிறது. இங்கேதான் நம்முடைய Chief Justice -ன் ஜட்ஜ்மென்ட் வருவது!

யாஜ்ஞவல்க்யர் ஆரம்பிக்கும்போதே ஜனகரிடம், "எவராவது ஒருத்தர் உனக்குச் சொன்னதை நானும் கேட்டுக்கொள்ளவேண்டும்" அதாவது "அதை எனக்குச் சொல்லு" என்கிறார். "உனக்குச் சொன்னது" என்பது ஏதோ ஊர் அக்கப்போரில்லை. முந்தின மந்திரத்தில்தான் அவர், அணு மாதிரி அத்தனை ஸ¨ட்சமமான ஆத்ம தத்வம் பற்றி விசாரம் பண்ணுவதற்காகத் தாம் வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.....

ராஜா (ஜனகர்) கல்மிஷமில்லாமல், ஹாஸ்யமும் த்வனிக்க, அவரை வரவேற்கிறபோது, "பசுவா (கோதானமா) ? ஸ¨க்ஷ்ம தத்வ விசாரமா? எதுக்கு வந்திருக்கேள்?" என்று கேட்டார். அதற்கு அவரும் கல்மஷமில்லாமல், அதே ஹாஸ்யபாவத்திலே, "இரண்டுக்காகவுந்தான்" என்று பதில் சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்த மந்த்ரத்திலேயே "எவராவது உனக்குச் சொன்னது" என்று அவர் சொல்கிறது அத்யாத்ம விஷயந்தான். 'எவராவது ஒருத்தர்' என்பதும் அந்த விஷயமாக ஜனகருக்கு உபதேசித்த உத்தமமான ஞானாசார்யர்களில் 'எவராவது ஒருத்தர்' என்றுதான் அர்த்தம் கொடுக்கும். அந்த ஸந்தர்ப்பத்தில் வேறே விதமாக இருக்கமுடியாது.

இங்கே ஆசார்யாள் ஸ்பஷ்டமாகவே, "c அநேக ஆசார்யர்களை ஸேவிக்கிறவனாச்சே!அவாள்ள (அவர்களில்) எவராவது ஒருத்தர் சொன்னதை நானும் கேட்டுக்கறேனே!" என்று ஜனகரிடம் யாஜ்ஙவல்க்ய்ர் சொன்னதாக பாஷ்யம் பண்ணியிருக்கிறார். "அநேகாசார்ய ஸேவி" (பல ஆசார்யர்களை வழிபடுபவர்) என்று பாராட்டு வார்த்தையாகவே போட்டிருக்கிறார். இதிலிருந்து ஆசார்யாள் அபிப்ராயமும் ஒருத்தன் பல குருமாரை ஆச்ரயிக்கலாம் என்பதாகத் தெரிகிறது. அவர் 'அபிப்ராம்' என்றால் நமக்கு அது 'ஜட்ஜ்மென்ட்'தான்!

பிற்காலத்தில் நம்முடைய அத்வைத ஸம்ப்ரதாயத்தில் ரொம்பவும் பெரியவர்களாக இருந்தவர்கள், உத்தம க்ரந்தங்கள் உபகரித்தவர்களை எடுத்துக்கொண்டாலும், இப்படிப் பல பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குரு

இருந்திருப்பதாகத் தெரிகிறது.

வித்யாரண்யாளுடைய முக்ய குரு வித்யா தீர்த்தரைப் பற்றிச் சொன்னேன்.

சங்கரானந்தர் என்பவரையும் அவர் குருவாக ஸ்துதித்திருப்பதையும் சொன்னேன். இந்த சங்கரானந்தரும் வித்யா தீர்த்தரின் சிஷ்யர்தான். இவருக்கும் வித்யாதீர்த்தர் மாத்திரமில்லாமல் அனந்தாத்மர் என்றும் இன்னொரு குரு இருந்திருக்கிறார் என்று அபிப்ராயமிருக்கிறது.

மதுஸ¨தன ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்று பரம அத்வைதி. அதே ஸமயம் க்ருஷ்ண பரமாத்மாவிடம் பக்தி உள்ளவர். இரண்டையும் இணைத்துக் கொடுத்த பெரியவர். "ஸ்ரீ ராம - விச்வேச்வர - மாதவாநதாம்" என்று அவரே (ஸ்ரீ ராமர், விச்வேச்வரர், மாதவர் என்ற) தம்முடைய மூன்று குருக்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்திருக்கிறார்.

ராமதீர்த்தர் என்று நம்முடைய (அத்வைத) ஸம்ப்ரதாயப் பெரியவர்களில் ஒருத்தர். அவருக்கு க்ருஷ்ணதீர்த்தர், ஜகந்நாதாச்ரமி, விச்வவேதர் என்று மூன்று குருமார் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

இப்போது சொன்ன பெரியவர்களுக்கெல்லாம் முந்தி ஆனந்தபோதர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு விமுக்தாத்மர், ஆத்மாவாஸர் என்று இரண்டு குருமார் இருந்ததாகத் தெரிகிறது.

ஒருத்தர் முக்யகுரு - மற்றவர் உபகுரு, ஒருவர் ஆச்ரம குரு - மற்றவர் வித்யாகுரு என்றும் இந்தப் பல குருமாரில் இருந்திருக்கலாம்.

எப்படியானாலும் ஒருத்தருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குரு இருப்பதில் ஒன்றும் தோஷமில்லை என்று ஆகிறது.

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை எடுத்துக் கொண்டாலும் ராமாநுஜருக்கே ஆளவந்தார் முக்யகுரு பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகிய மூன்று பேரும் உபகுருக்கள் என்கிறாற்போலச் சொல்கிறார்கள்....

எங்கேயோ இருந்து எங்கேயோ வந்துவிட்டேன்!எங்கேயானாலும் குரு - சிஷ்ய ஸமாசாரந்தான். அதிலும் முக்யமான ஒரு ஸமாசாரந்தான் என்ற மட்டில் ஸந்தோஷந்தான்.....

அஞ்ஞானத்தால் கண் கட்டப்பட்டு, மாய ப்ரபஞ்சக் காட்டில் விடப்பட்ட ஜீவாத்மா ஒரு முக்ய குரு - பல உபகுருமாரால் ஞானப்பார்வை பெற்று இந்தக் காட்டிலிருந்து 'வீடு' என்றே சொல்லப்படுகிற பெரிய வீட்டுக்கு 'மோக்ஷத்திற்கு) த் திரும்புவதாக, இந்த நாளில் 'உருவகக் கதை' என்கிற மாதிரி உபநிஷத்தே கதை சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.

அந்தக் கதை யாருக்கு உபதேசிக்கப்பட்டதோ அந்த சிஷ்யனே இப்படிப் பல குருமார் படைத்தவன்தான் என்று சொன்னேன்.

உத்தாலகர் என்று ஒரு KS. அருணர் என்பவரின் பிள்ளையானதால் உத்தாலக 'ஆரூணி' என்று அவரைச் சொல்வது. அவர் பிள்ளைக்குப் பேர் ச்வேதகேது. உத்தாலகரே நல்ல வித்வானானாலும், பிறத்தியார் கண்டிப்பிலே படித்தால்தான் வித்யையை நன்றாக உள்ளே ஏற்றிக்கொள்ள ஜாஸ்தி இடமுண்டு என்பதால் அவர் பிள்ளையை வேறே குருகுலத்தில் படித்துவிட்டு வருவதற்காக அனுப்பினார். அவனும் அப்படியே போய் குருகுலத்தில் அநேகப்

பெரியவர்களிடம் அநேகவித்யைகள் பன்னிரண்டு வருஷம் படித்துவிட்டுத் திரும்பி வந்தான்.

தன்கிட்டேயே படித்தால் அவன் உருப்படியாய் வரமாட்டானென்றுதான் அப்பா வெளியிலே அனுப்பி வைத்தது. ஆனால் அப்படிப் போயும் அவன், 'தானாக்கும் இத்தனை வருஷம் இத்தனை விஷயம் படிச்சிருக்கோம்!' என்ற மண்டை கனத்தோடேயே திரும்பி வந்தான்.

பொதுவாக ஸகல ஜனங்களுமே விநயமாக இருந்த காலம் அது. அதிலும் சின்ன வயஸுக்காரர்கள், சிஷ்யர்கள் ரொம்பவுமே தழைந்து இருப்பார்கள். ஆனால் எந்தக் காலமானாலும் மநுஷ்ய பலஹீனங்கள் எங்கேயாவது கொஞ்சம் தலை தூக்கிக்கொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது படிக்கப் படிக்க மேலும் மேலும் 'தான்' (அஹங்காரம்) என்று நாம் பார்க்கிறதற்கு மறுகோடியாக, படிக்கப் படிக்க மேலும் மேலும் அடக்கம் என்பதையே ஸதாவும் குருமார்கள் சிஷ்யர்களிடம் சொல்லிச் சொல்லி அப்படிப் பழக்கிய அந்த நாளிலும் இந்தப் பையன் ச்வேதகேது அதற்கு வித்யாஸமாக, ரொம்பவும் கர்வியாகியிருக்கிறான்... 'பையன்' என்றால் அவ்வளவு ஸரியோ? என்னமோ? அவனுடைய பன்னிரண்டாம் வயஸில் அப்பாக்காரர் வேறே குருமாரிடம் படிக்க அவனை அனுப்பினார், அவன் பன்னிரண்டு வருஷம் அப்படிப் படித்து இருபத்துநாலு வயஸில் திரும்பி வந்தான் என்று இருக்கிறது. அவனைப் 'பைய'னில் சேர்க்கலாமா?...

அவனுடைய மண்டைக் கனத்தை இறக்கி அவனுக்கு புத்தி கற்பிப்பதற்காகவேதான் பிற்பாடு பிதா அந்த கந்தார தேசக் கதை சொல்லும்போது கதாபாத்ர ஜீவன் இவன் மாதிரியே பலபேரிடம் கேட்டு வழிதெரிந்த கொண்டதாகச் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. இப்படி ஒருத்தன் தெரிந்துகொண்டால் மாத்திரம் போதாது, அதிலே கர்வம் உண்டாகி வீணாயும் போகலாம் என்றே அந்தக் கதையில் சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய 'பண்டிதத்தன்மை பற்றியும், 'மேதை' பற்றியும் சொல்லியருக்கலாம். உபதேசத்தை நன்றாக புத்தியில் நிறுத்திக் கொள்வதே 'மேதை'. புத்தி என்றால் மூளை மட்டுமில்லை, ஜீவனை நல்ல முறையில் பக்குவப்படுத்தும் 'நல்லறிவு' என்பது. பண்டிதத்தன்மை என்றாலும் 'ஸ்காலர்ஷிப்' மட்டுமில்லை. "நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவர் சொன்னாற் போல கற்ற வித்யை தன்னுடைய வாழ்க்கையிலேயே, நடத்தையிலேயே ப்ரகாசிக்கும்படி ஒழுகுவது. கர்வத்துக்கு இடம் கொடுத்தால் இந்த இரண்டும் ஸித்திக்கவே ஸித்திக்காது. மூளையோடு நிற்கிற படிப்பு 'மநுஷன்' என்று ஒருத்தனை ஆக்கிவிடமுடியாது, அதாவது குணசாலியாகக் முடியாது. இதற்கு லாயக்கற்ற மூளையைத் தாழப் படுக்கப்போட்டு விநயமாயிருந்தாலே அப்படி ஆக முடியும்.

பின்னால் நாம் பார்க்கிறதிலிருந்து ச்வேதகேதுவுக்கு உசந்த மூளைத் திறமை இருந்தது தெரிகிறது. அதனால் நேராகக் குத்திக்காட்டிச் சொல்லாமல் மறைமுகமாக 'ஹின்ட்' பண்ணினாலே புரிந்துகொண்டு விடக்கூடியவன். நேரே குத்திக்காட்டினால் கோபம் வரலாம், 'ஹின்ட்' பண்ணினால்தான் எடுத்துக்கொள்ளத் தோன்றும் என்றே அப்பா அப்படி (உருவகக் கதை) சொல்லி,

மறைமுகமாக விட்டிருக்கலாம்.

'குருவே என்னவும் பண்ணிக்கட்டும்' என்று தன்னைப் பூர்ணமாக அவனிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு சராணாகதி செய்ய எல்லாராலும் முடியாதுதான். முடிந்த

மட்டும் அதைப் பண்ணி, சிஷ்யனானவன் தானே ஸ்வய முயற்சியும் நிறையப் பண்ணத்தான் வேண்டும். அதனால் தான் கட்டையவிழ்த்துவிட்ட குருவே முழு வழியும் தானே கூட இருந்து அழைத்துப்போனதாகச் சொல்லாமல், அவன் மட்டுமே போனதாகச் சொல்லியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் அவர் சொல்லிக் கொடுத்த வழியில்தான் போனான் என்பது முக்கியம்.

திசை- வழி- காட்டுகிறவர் 'தேசிகர்' என்ற டெஃபனிஷனுக்கு உபநிஷத்தில், திசை திசையாகத் திரும்பி உதவி கேட்டவனுக்கு வழி சொல்லித் தந்தவனைக் காட்டி, அதுதான் ஆசார்யனின் கார்யம் என்று சொல்லியிருப்பது அழுத்தமான சான்றாக இருக்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மஹான்களுக்கும் பல குருமார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வேதத்தில் 'வழிகாட்டி'குரு
Next