ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
பட்டுப்புடவை, பட்டு வேஷ்டிகளினால் பாவம் தான் வருகிறது. அஹிம்சை,அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு நாம் மாமிசமே சாப்பிடுவதில்லை. கொஞ்சம் யோசித்தால் நமக்கு இந்தப் பட்டுப்புடவை வேஷ்டி இவற்றால் வரும் பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கும் கூட வராது. ஒரு ஆடோ, இரண்டு ஆடோ உயிரை இழக்கின்றன என்றால் இங்கே ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளுக்கு இம்சை ஏற்படுகிறது.
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |