கெட்ட குணங்கள் தாக்காமலிருக்க

கெட்ட குணங்கள் தாக்காமலிருக்க

அவ்வப்போது பொறாமை, கோபம் எல்லாம் வரத்தான் செய்யும். சண்டைக்குப் போவோமா, சுவரில் திட்டி எழுதுவோமா என்று தோன்றும். ஆனால் இதுகளில் புத்தி போனால் படிப்புக் கெட்டுப் போகும். நல்ல பெயரும் எடுக்க முடியாது. இதற்காகத்தான் தினமும் எழுந்தவுடனும், இரவு தூங்கும் முன்பும் ஸ்வாமியைப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

நம்மை உருட்டித் தள்ளுகிற மாதிரி பெரிய காற்று அடித்தால் தூணைப் போய் பிடித்துக் கொள்கிறோமல்லவா? அதே மாதிரி கோபம், பொறாமை முதலிய கெட்ட குணங்கள் நம்மைத் தாக்குகிற போது அம்மையப்பனாக இருக்கிற ஸ்வாமியை பிடித்துக் கொள்ள வேண்டும். நாம் விழாமல் அவர் காப்பார்.