ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
காசிக்கும் காஞ்சிக்கும் ஒரு எழுத்துதான் வித்யாசம். இரண்டும் முக்தி க்ஷேத்ரங்கள்.தென்னிந்தியர்கள் வடக்கே க்ஷேத்ராடனம் செல்கிறார்கள். வடக்கே உள்ளவர்கள் தெற்கே வருகிறார்கள். அந்த வடஇந்தியர்கள் அப்போது காமாட்சியை தரிசனம் செய்வதோடு அம்பிகையின் சஹோதரரான வரதராஜரையும் தரிசனம் செய்யாவிட்டால் யாத்திரைக்கு பலனில்லை. தென்னிந்தியர் காசிக்குச் செல்லும் போது ஸ்ரீ ஜகன்னதக்ஷேற்றமான பூரிக்கும் சென்று அப்பெருமானை தரிசனம் செய்யாமல் வந்தால் பலனில்லை.இதைப் பக்தர்கள் உணர வேண்டும். மூர்த்தி பேதங்களை ஒழித்து சம பாவனையுடன் க்ஷேத்ராடனம் செய்தால் தான் எவரும் முக்தி பெறலாம். இச் சிவ-விஷ்ணு அபேதத்தை அக்கோவில்கள் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.

- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
தமிழ் தேடல்
Search Site

தெய்வத்தின் குரல் ஆடியோ

Kanchi Mahaswamigal

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்

நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கர மடக் கிளைகள் மற்றும் அவற்றின் விபரங்களைக் காணவும்.