திருச்செந்தூர், தமிழ்நாடு
மதுரை சாலை மார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து 36மைல் தூரத்தில் திருச்செந்தூர் உள்ளது. இங்கு வங்காள விரிகுடா கடற்கரையில் மிகுந்த கலைவளம் சூழ்ந்த சூழலில் கோயில் அமைந்துள்ளது. சூரசம்ஹாரத்திற்காக ஞானவேல் பெற்று சூரபத்மனை வென்ற சுப்ரமண்யருக்கு வெற்றிக்கு அடையாளமாக ஏற்பட்ட வெற்றிச்சின்னம். நவம்பர் மாதத்தில் இங்கு நடைபெறும் ஸ்கந்த ஷஷ்டி பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் கண்டு களிக்கப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானின் அருளால் பிற்காலத்தில் குமரகுருபரர் என்று புகழ்ந்து போற்றப்பட்ட கவிஞர் 5 வயது பாலகனாக ஊமையாக இருந்து பின் பெரும் புலவர் ஆனார். ஆதிசங்கரர் இந்த தலத்திற்கு
விஜயம் செய்து மிகவும் அற்புதமான ஆனந்தமயமான சுப்ரமணிய புஜங்கத்தினை அருளினார்.