பொதுவான பெருங் கருத்து : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இப்படி வேதங்கள் பலவாக இருந்தாலும், அதில் ஒவ்வொன்றைச் சேர்ந்தவர்களிடையே ஆசாரங்களில் சில வித்தியாஸங்கள் இருந்தாலும், எல்லா வேதங்களும் ஒரே லக்ஷ்யத்தை உடையவைதான். ஸமஸ்த லோகத்திற்கும், ஸகல ஜீவ ஜந்துக்களுக்கும் க்ஷேமத்தைக் கோருவதும், அவனவன் ஆத்மாவை அபிவிருத்தி பண்ணிக்கொண்டு, ஸத்ய தத்வத்தோடு சாச்வதமாகச் சேர்ந்து விடுவதும்தான் எல்லா வேதங்களுக்கும் பொதுவான லக்ஷ்யம்.

வேதங்களில் பொதுவான இன்னொரு பெருமை, ‘இது ஒன்றுதான் வழி’, ‘இது ஒன்றுதான் தெய்வம்’ என்று அது சொல்லாமல், சிரத்தையோடு எந்த மார்க்கத்தை அனுஸரித்து, எந்தத் தேவதையை எப்படி உபாஸித்தாலும், அதுவே சத்தியமான ஒரு வழியில் கொண்டு விட்டுவிடும் என்பதுதான். வேதம் தவிர இந்த மாதிரிப் பல வழிகளை ஆதரித்துப் பேசுகிற மதப் பிரமாண நூல் வேறெதுவுமே லோகத்தில் இருக்கவில்லை. தன் வழி ஒன்றே மோக்ஷ மார்க்கம் என்றுதான் அந்தந்த மதத்தின் மூலநூலும் சொல்லும். ஒரே ஸத்தியத்தைப் பல பேர் பல தினுசாகக் கண்டு கொள்ளலாம் என்று விசால மனப்பான்மையோடு சொல்வது வேதம் மட்டும்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிராம்மணம், ஆரண்யகம்
Next