குர்வஷ்டகம் 1 சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II மி

ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள்

குர்வஷ்டகம்

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளியது

1
சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்
யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி
மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்
II
பொருள்: மிக அழகான உடற்கட்டு, மனைவியம் மிக அழகியவள்தான்;புகழும் பலவிதத்தில் இனியது. செல்வமோமேருவையத்தது. இவை யெல்லாம் குருவின் திருவடிகளில் மனம் பற்றுக்கொண்டால்தான் அழகியவை, இனியவை, இல்லையெனில் என்ன பயன்?
2
கலத்ரம் தனம் புக்ரபௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் I
மன:சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: மனைவி, செல்வம், புத்ரன், பேரன் ஆகியவையும், வீடு, உறவினர் இன்னும் இவையனைத்தும் அமைந்ததுதானே உள்ளது. குருவின் திருவடித்தாமரையில் மனம் படியவில்லையானால் இவையனைத்துமே பயனில்லையே!
3
ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி
மன:சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: வாயைத்திறந்தால் போதும் ஆறங்கங்களுடன் வேதம் ஒலிக்கும், சாஸ்திரங்களோ, கவித்வமோ, அது கத்மாயினும் சரி, பத்யமாயினும் சரி இனிதே படைக்க வல்லவன்தான். ஆனால் குருவின் திருவடித்தாமரையில் மனது ஈடுபடவில்லையெனில் அவயனைத்தும் இருந்தும் பயனில்லை, பயனில்லை, பயனில்லை
4
விதேசேஷு மான்ய:ஸ்வதேசஷு தன்ய:
ஸதாசார வ்ருத்தேஷு மத்தோ ந சான்ய: I
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: வெளிநாடுகளில் போற்றுதலுக்குறியவனே, நம்நாட்டிலும் நல்லொழுக்க நடவடிக்கைகளில் என்னை விட மேலானவனில்லை என்று மார்தட்டிக்கொண்டால் போதுமா?மனது குருவின் திருவடிகளில் பதியவேண்டாமோ?அதில்லையெனில் எதிருந்தும் பயனில்லை, பயனில்லை, பயனில்லை
5
க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி
மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: பூமண்டலம் முழுவதும் உள்ள சிற்றரசர் பேரரசர்களால் எந்த குருவினது திருவடிகள் சேவிக்கப்பட்டுள்ளனவோ அப்படிப்பட்ட குருவின் திருவடித்தாமரைகளில் மனது பற்றவில்லையானால் என்ன பயன், என்ன பயன், என்ன பயன்
6
யசோ மே கதம் திக்ஷுதானப்ரதாபாத்
ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: கொடைத்திறன் காரணமாக என் புகழ் எட்டு திசைகளிலும் பரவியுள்ளது. குருவருளால் உலகப்பொருளனைத்தும் என் கைவசப்பட்டுள்ளது. ஆனால் மனதுமட்டும் குருவின் திருவடிகளில் பதியவில்லை என்றால் பின் எதிருந்தும் வீணே!
7
நபோகே நயோகே நவா வாஜிராஜௌ
நகாந்தா முகே நைவ வித்தேஷு சித்தம்வீ
மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: சுகபோகத்திலும், யோகத்திலும், குதிரைப்படையிலும், பிரியையின் முகத்திலும், பணவரவிலும் மனது ஈடுபடவில்லை என்றால் அதுசரி, ஆனால் அதேபோல் குருவின் திருவடித்தாமரைகளிலும் பதியவில்லையென்றால் அதன் பின் பயன்தான் என்ன?
8
அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
பொருள்: காட்டிலும் சரி (நாட்டில்) சொந்த வீட்டிலும் சரி, ஏதோ ஒரு வேலையிலேயும், அல்லது தனது உடற்பாதுகாப்பிலும் கூட மனதில்லை, என்றால் அது சரியோ தவறோ?ஆனால் குருவின் திருவடிகளில் மனம் பதியாவிட்டால், பின் என்ன பயன், என்ன பயன் என்ன பயன்?
9
குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ ச கேஹீவீ
லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி
பொருள்: குருவின் வாய்ப்படச்சொன்ன வாக்யத்தில் எவன் மனம் ஈடுபடுகிறதோ, எந்த ஒரு புண்யவான் இந்த குருவின் பெருமை பற்றிய எட்டு சுலோகத்தைப்படிக்கிறானோ - அவன் சன்யாசியாகவோ, அரசனாகவோ, பிரம்மச்சாரியாகவோ, கிருஹத்தனாகவோ - இருக்குமவன் விரும்பியதை அடைந்து பிரம்ம பதவியையும் அடைவான்