ஜகந் நாதாஷ்டகம் 1 கதாசித் காலிந்தீதட விபினஸங்கீதக வரோ முதா கோபீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப: I ரமா சம்பு ப்ரஹ்மாமரபதி கணேசார்சிதபதோ ஜகந்நாத:ஸ்வாமீ நயனப

ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள்

ஜகந் நாதாஷ்டகம்

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளியது

1
கதாசித் காலிந்தீதட விபினஸங்கீதக வரோ
முதா கோபீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப: I
ரமா சம்பு ப்ரஹ்மாமரபதி கணேசார்சிதபதோ
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: ஒரு சமயம் யமுனையாற்றின் கரையில் காட்டில் ரீங்கார கானம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் கோபியாஸ்திரீகளின் முக கமலங்களை மொய்க்கும் வண்டாக இருந்தவர். லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணபதி ஆகியோர் சேவைகளை ஏற்கும் ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!
2
புஜேஸவ்யே வேணும் சிரஸி சிகிபிஞ்சம் கடிதடே
துகூலம் நேத்ராந்தே ஸ்ஹசரகடாக்ஷம் ச விதத் I
ஸதா ஷ்ரிமந் ப்ருந்தாவனவஸதி லீலா பரிசயோ
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: தன் இடது கையில் புல்லாங்குழலும், தலையில் மயில் தோகையும், இடுப்பில் பீதாம்பரமும், கண்களில் கடாக்ஷமும் வைத்துக்கொண்டு எப்பொழுதும் ப்ருந்தாவனத்தில் வாழும் பாங்குடன் விளங்கும் ஜகந்நாதஸ்வாமி என் கண் முன்னே தோன்ற வேணுமே
3
மஹாம்போதேஸ்தீரே கனகருசிரே நாலசிகரே
வஸன் ப்ராஸா தாந்த:ஸஹஜபலபத்ரேண பலிநாமி
ஸுபத்ராமத்யஸ்த:ஸகலஸுரஸேவாவஸரதோ
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: பெருங்கடற்கரையில் நீலஒடுவேய்ந்த தங்கமயமான மாளிகையினுள் தன்துஸஹோதரர் பலராமுடன், ஸுபத்ரையின் பக்கத்தில் தேவர்கள் வழிபட வாய்ப்பளிக்கும் ஜகந்நாத ஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!
4
க்ருபாபாராவார:ஸஜலஜலதச்ரேணி ருசிரோ
ரமாவாணீ ஸோமஸ்புர தமல பத்மோத்பவ முகை: I
ஸுரேந்த்ரை:ஆராத்ய:ச்ருதிகண சிகா கீதசரிதோ
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: கருணைக்கடல், அவர், நீருண்ட மேகம் போன்ற அழகுடையவர், லக்ஷ்மி, ஸரஸ்வதி, சந்திரன் பிரம்மா முதலிய தேவர்கள் வழிபட, உபநிஷதங்கள் போற்றப்பாடும் சரிதையுடையவராத்திகழும் ஜகந்நாதஸ்வாமி என் கண் முன்னே தோற்றட்டுமே!
5
ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை:
ஸதுதிப்ராதுர்பாவம் ப்ரதிபதமுபாகர்ண்ய ஸதய: I
தயாஸிந்து:பந்து:ஸகல ஜகதாம் ஸிந்துஸுதயா
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: ரதத்திலேறி iF வலம் வரும்போது, வழியில் கூடிய பிராமணர்கள் பாடும் ஸ்தோத்திரப்பாடலை ஒவ்வொரு அடியிலும் கேட்டு பரிவுகொள்ளும் கருணைக்கடலாய், ஸகல உலகிற்கும் லக்ஷ்மியுடன் பந்து வாய்த்திகழும் ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே
6
பரப்ரஹ்மாபீட:குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸீ நீலாத்ரௌ நிஹிதசரணோsனதசிரஸி I
ரஸானந்தோ ராதா ஸரஸவபுராலிங்கனஸுகோ
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: பரப்ரஹ்மமேயான முடியழகையுடையவரும், கருநெய்தல் போன்ற மலர்ந்த கண்களையுடையவரும், நீலமலையில் தங்கியிருப்பவரும், ஆதிசேஷன் தலையில் கால்வைத்திருப்பவரும், ரஸானந்தம் மேலிட்டவரும், ராதையின் ஆலிங்கனத்தால் சுகங்கொண்ட வருமான ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டும்
7
ந வை ப்ரார்த்யம் ராஜ்யம் நச கனகதா போகவிபவே
ந யாசே ஷிஹம் ரம்யாம் நிகிலஜனகாம்யாம் வரவதூம் I
ஸதாகாலே காலே ப்ரமதபதினா கீதசரிதோ
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: எனக்கு ராஜ்யம் வேண்டப்பட்டதன்று. அனுபவிக்கும் செல்வத்திலும் தங்கம் வேண்டேன். அழகிய அனைவரும் விரும்பும் படியான மணப்பெண்ணையும் வேண்டேன். அவ்வப்போது பரமேச்வரன் போற்றிப்பாடும் சரிதம் வாய்ந்த ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டும்!
8
ஹர த்வம் ஸம்ஸாரம் த்ருததரமஸாரம் ஸுரபதே
ஹர த்வம் பாபானாம் விததி மபராம் யாதவபதே I
அஹோ தீநாநாதம் நிஹிதமசலம் பாது மநிசம்
ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II
பொருள்: ஹேதேவபதே!ஸாரமற்ற ஸம்ஸாரத்தை சீக்ரமே விலக்கிவிடு. ஹேயதுபதே!மற்றொறு பாபக்குவியலை விலக்கிவிடு. ஏழை எளியோரையும், அருகில் உள்ள நீலமலையையும் அனவரதமும் காக்கவேண்டி ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!