சித்திர ஆதிசங்கரர் இப்படியே வாதம் போய்க்கொண்டிருந்தது மணிக் கணக்கில் மட்டும் அல்ல நாட்கணக்கில் ஓடிற்று

சித்திர ஆதிசங்கரர்

இப்படியே வாதம் போய்க்கொண்டிருந்தது. மணிக் கணக்கில் மட்டும் அல்ல. நாட்கணக்கில் ஓடிற்று.

மாமேதையான நமது ஆசாரியாருக்கு சமதையாக இப்படி வாதம் செய்யக் கூடியவர் யாராக இருக்கும் என்று அதிசயித்தார் பத்மபாதராகிவிட்ட சநந்தனர். இந்தக் கிழவர் நிச்சயமாகக் சாமானிய மானுடராக இருக்கமுடியாது நமது குருநாதரைப் போலவே இவரும் ஒர் அவதாரப் புருஷராகத்தான் இருக்கவேண்டும் எனக்கருதி, ஆழ்ந்த பக்தியுடன் அவ்விருவரையும் நோக்கினார்.

அவரது பக்தியின் சக்தியால் உண்மையை மூடியிருந்த திரை விலகியது. வந்திருக்கும் கிழவர் யார் என்று பத்மபாதர் கண்டுகொண்டார். அவர் வேறு யாருமில்லை!பிரம்ம சூத்திரத்தை இயற்றிய சாட்சாத் வியாச மகாமுனிவரே தான் அவர்!அந்த வியாசர் யாரெனில் நாராயணரின் அவதாரமேதான். அவரை அடையாளம் கண்டு கொள்ள பத்மபாதரும் திருமாலின் அம்சம் தான்.

பத்மபாதர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே- சங்கரரே வந்திருக்கும் கிழவரின் வேஷத்தைப் புரிந்து கொண்டார்!மகரிஷே!தங்களிடம் அடியேன் வாதிக்குமாறு செய்யலாமா?அபச்சாரம் செய்துவிட்டேனே!"என்று வியாசரை வணங்கினார்.

வியாசர் அவருடன் நகைத்து "ஐயனே!என் சுய உருவைக் காட்டினால் c உன் வாதத்திறனைக்காட்ட மாட்டாய் என்றே மாறு வேஷம் போட்டேன். c எனது பிரம்ம சூத்திரத்துக்குத் தந்துள்ள விளக்கமே நான் மனமார உவப்பதாகும். அதுவே உண்மை. இந்த உண்மையை c நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இன்றோடு உனக்குப் பதினாறாண்டு நிறைந்தது. இதோடு ஆயுளை முடித்துவிடாதே. உனக்குப் இன்னும் பதினாறாண்டு வாழ்வினைப் பிரம்மாவிடமிருந்து பெற்று வந்துள்ளேன். உன் வாக்கியங்களை நாடு முழுவதும் பரப்புவாயாக எனக் கூறி மறைந்தார் வியாச முனிவர்

<< Prev. page * Next page >>