ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
பதினோராம் பத்து
குன்றமொன்றெடுத்து
தலைவியிரங்கல்
ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு பாடும் இப்பகுதியில், தென்றல் முதலானவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு நோயை வெளிப்படுத்துகிறார்;இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்து உலகை வாழ்வித்த பெருமான் தமக்குத் துன்பம் தருவதைச் சுட்டிக் காட்டிப் பாடுகிறார்.
கலி விருத்தம்
தென்றல் வந்து b வீசுகின்றதே!
1952. குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை
அன்று காத்தவம் மான்,அ ரக்கரை
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்! 1
வாடைக் காற்று என்னை வாட்டுகிறதே!
1953. காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,
தாரு மார்வமும் கண்ட தண்டமோ,
சோரு மாமுகில் துளியி னூடுவந்து,
ஈர வாடைதான் ஈரு மென்னையே! 2
நிலவு சீறுகிறதே!என் செய்வேன்?
1954. சங்கு மாமையும் தளரு மேனிமேல்,
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,
கொங்க லர்ந்ததார் கூவு மென்னையே! 3
சந்திரன் வெங்கதிர் வீசுகிறதே!ஏன்?
1955. அங்கொ ராய்க்கலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நஞ்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே! 4
கடல் ஒலி என்னை வருத்துகிறதே!
1956. அங்கொ ராளரி யாய்,அ வுணனைப்
பங்க மாவிரு கூறு செய்தவன்,
மங்குல் மாமதி வாங்க வேகொலோ,
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே! 5
அன்றிலின் குரல் துன்புறுத்துகிறதே!
1957. சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,
அன்றி லின்குரல் அடரு மென்னையே! 6
மன்மதன் என்மீது அம்பு எய்கின்றானே!
1958. பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
iM லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே! 7
என் உயிரைக் காத்துக்கொள்வது அரிது
1959. மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,
மாலின் அந்துழாய் வெந்தென் னுள்புக,
கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர்
ஆலி வந்ததால் அரிது காவலே! 8
திருத்துழாய் வாசனைதான் என்னைக் காக்கும்
1960. கெண்டை யண்கணும் துயிலும்,என்நிறம்
பண்டு பாண்டுபோ லொக்கும், மிக்கசீர்த்
தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,
வண்டு கொண்டுவந் தூது மாகிலே. 9
இவற்றைப் பாடுவோர்க்குத் துன்பம் இல்லை
1961. அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்புகழ் மங்கை வாள்கலி
கன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே. 10
அடிவரவு:குன்றம் கார் சங்கு அங்கொராய்க்குலத்து அங்கொராளரி சென்று பூவை மாலினம் கெண்டை அன்று - குன்றமெடுத்து.