சைவம் திருவண்ணாமலை,தமிழ்நாடு சென்னையிலிருந்து 100மைல் தூரத்தில் உள்ளது அருணாசல மலை இதன் அடிவாரத்தில் பஞ்சபூத தலங்க

சைவம்

திருவண்ணாமலை,தமிழ்நாடு

சென்னையிலிருந்து 100மைல் தூரத்தில் உள்ளது அருணாசல மலை. இதன் அடிவாரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக தேஜ் அக்னி தலத்தில் தேஜோலிங்கமாக சிவன் கோயிலில் இறைவன் காட்சி அளிக்கின்றார். இங்கு இவருக்கு அண்ணாமலையார் எனவும் தேவிக்கு உண்ணாமுலை அம்மன் எனவும் பெயர். கார்த்திகை பௌர்ணமி அன்று மலை உச்சியில் ஒரு பெரிய தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை சுற்றி பலமைல்களில் இருந்தும் காணலாம். ஆன்மிக பெருமை வாய்ந்த இந்த மலைச்சாரலில் ரமண மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருடைய ஞான அருளை அவருடைய சீடர்கள் பலர் பெற்றனர். ரமண ஆசிரமம் அமைதியான ஒரு தலம்.