நவக்கிரகங்கள் அங்காரகன் ராசி மண்டலத்தில் இவர் மர்மக்கலை கடவுளாகக் கருதப்படுகிறார் இவர

நவக்கிரகங்கள்

அங்காரகன்

ராசி மண்டலத்தில் இவர் மர்மக்கலை கடவுளாகக் கருதப்படுகிறார். இவருக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. இவரை ரோமாபுரி நகரத்தினரும் குருவாகக் கருதுகின்றனர்.

இந்த கோளிடம் பிரார்த்தனை செய்து கொள்ள கடன் நிவாரணம் ஏற்படும். ஏழ்மையும் வியாதியும் நீங்கும். குறிப்பாக தோல் சம்மந்தப் பட்ட வியாதி உடனடியாக நீங்கும். உயர்ந்த இன பெண் மனைவியாகக் கிடைப்பாள். பெயரும் புகழும் குடும்பத்திற்கு கொணரக்கூடிய மகன் பிறப்பான். சொத்தும் வாகன வசதியும் அளிக்கக் கூடியவர் இந்த கிரகம். அங்காரகனை தொழுது வணங்க இழந்த கண்பார்வை மீண்டும் கிட்டும்.

அங்காரகனை வழிபட உகந்த நாள் செவ்வாய்கிழமை. இவருக்கு சாம வேதம் பாடிட மிகவும் பிடிக்கும். ராசி மண்டலத்தில் மேஷ, விருச்சிக வீடுகளுக்கு இவர் அதிபதி. ஒவ்வொரு ராசியிலும் 1 1/2 மாதங்கள் இவர் தங்கி 12 ராசிகளையும் சுற்றி வர 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோயிலில் இவருக்கு தனிக்கோயில் உள்ளது.