வைஷ்ணவம் ஸ்ரீ பத்மாவதி, திருச்சானூர், ஆந்திரப்ரதேசம் ஆந்திரப்ரதேசத்தில் திருப்பதிக்கு 3 மைல் தூரத்தில் உள்ளது திரு

வைஷ்ணவம்
ஸ்ரீ பத்மாவதி, திருச்சானூர், ஆந்திரப்ரதேசம்

ஆந்திரப்ரதேசத்தில் திருப்பதிக்கு 3 மைல் தூரத்தில் உள்ளது திருச்சானூர். இங்கு அலர்மேல் மங்கை கோயில் உள்ளது. இவர் வெங்கடாசலபதியின் மனைவி. இவருக்கு பத்மாவதி என்று மற்றொரு பெயரும் உண்டு. இவர் தாமரை மலரில் இருந்து தோன்றினார் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஆனபிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடை.யே ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர் என்று வரலாறு பேசப்படுகிறது. இந்த வரலாற்றினை உறுதிப்படுத்துவது போன்று இங்கு நடைபெறும் பூஜைகள் இன்றும் அமைந்துள்ளது. மலையில் வெங்கடேஸ்வரருக்கு வைகானஸ முறையில் பூஜை நடக்கும் போது இங்கு மலை அடிவாரத்தில் தேவிக்கு பாஞ்சராத்ர முறையில் பூஜை நடக்கிறது.