ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்கவித்தலம் (கபிஸ்தலம், கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 மைல்வண்டியில் வரலாம். கும்பகோணத்திலிருந்தும் திருவையாறு பஸ்ஸில் வரலாம். சத்திரங்கள், கடைகள் உண்டு. கும்பகோணத்திலிருந்தும் பாபநாசத்திலிருந்தும் டவுன் பஸ் வசதி உண்டு.
மூலவர் - கஜேந்த்ர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுகமண்டலம்.
தாயார் - ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்) .
தீர்த்தம் - கஜேந்த்ர புஷ்கரிணி, கபில தீர்த்தம்.
விமானம் - ககநாக்கருதி விமானம்.
ப்ரத்யக்ஷம் - சிறிய திருவடி, கஜேந்த்ரன்.
விசேஷம் - ஆதிமூலமே என்று அழைத்தபோது கஜேந்திரனுக்கு அபயம் அளித்த ஸ்தலம். 'ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்' இப்பெருமாள்
மங்களாசாஸனம் -
திருமழிசையாழ்வார் - 2431 - 1 பாசுரம்