மண்ணை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

மண்ணை

பகவானோடு தொடர்பு கொண்ட பொருள்களையும் மற்றப் பொருள்களையும் காணும்போது பகவானையே கண்டதாக மகிழ்வதே சிறந்த ஸ்ரீ வைஷ்ணவத்வமாகும். ஆழ்வாரின் இத்தகைய நிலைமையை இத்திருவாய்மொழி கூறுகிறது.

திருமாலாகிய நாயகனின் பிரிவையாற்றாத ஆழ்வாராகிய நாயகியின் நிலையைத் தாய் கூறுதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவனின் பிரிவை ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்

தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாமனன் என் மகளை மயக்கிவிட்டானே

3040. மண்ணை யிருந்து துழாவி

'வாமனன் மண்ணிது' என்னும்,

விண்ணைத் தொழுதுவன் மேவு

வைகுந்த மென்றுகை காட்டும்,

கண்ணையுள் நீர்மல்க நின்று

'கடல்வண்ணன்' என்னும் அன்னே!என்

பெண்ணைப் பெருமயல் செய்தாற்

கென்செய்கேன் பெய்வளை யீரே.

என் மகள் பிதற்றுகிறாளே என் செய்வேன்?

3041. பெய்வளைக் கைகளைக் கூப்பிப்

'பிரான்கிடக் கும்கடல்' என்னும்,

செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச்

'சிரீதரன் மூர்த்தியீ ª 'தன்னும்,

நையும்கண் ணீர்மல்க நின்று

'நாரணன்' என்னும்அன் னே,என்

தெய்வ வுருவில் சிறுமான்

செய்கின்ற தொன்றறி யேனே.

என் மகளின் செய்கை எனக்குப் புரியவில்லையே!

3042. அறியும்செந் தீயைத் தழுவி

'அச்சுதன்' என்னும்மெய் வேவாள்,

எறியும்தண் காற்றைத் தழுவி

'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,

வெறிகொள் துழாய்மலர் நாறும்

வினையுடை யாட்டியேன் பெற்ற

செறிவளை முன்கைச் சிறுமான்

செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.

நாரணன் என் மகளை இப்படி மாற்றிவிட்டானே

3043. ஒன்றிய திங்களைக் காட்டி

'ஒளிமணி வண்ணனே' என்னும்

நின்றகுன் றத்தினை நோக்கி

'நெடுமாலே!வா'என்று கூவும்,

நன்றுபெய் யும்மழை காணில்

'நாரணன் வந்தான்'என் றாலும்,

என்றின மையல்கள் செய்தார்

என்னுடைக் கோமளத் தையே.

மாயோன் என் மகளை ஆட்டிவைக்கின்றானே

3044. கோமள வான்கன்றைப் புல்கிக்

'கோவிந்தன் மேய்த்தன' என்னும்,

போமிள நாகத்தின் பின்போய்

'அவன்கிடக் கையீ ª 'தன்னும்,

ஆமள வொன்றும் அறியேன்

அருவினை யாட்டியேன் பெற்ற,

கோமள வல்லியை மாயோன்

மால்செய்து செய்கின்ற கூத்தே.

கண்ணனிடம் என் மகள் பித்துக் கொண்டுவிட்டாளே.

3045. கூத்தர் குடமெடுத் தாடில்

'கோவிந்த னாம்'என ஓடும்,

வாய்த்த குழலோசை கேட்கில்

'மாயவன்' என்றுமை யாக்கும்,

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்

'அவனனண்ட வெண்ணெயீ ª 'தன்னும்,

பேய்ச்சி முலைசுவைத் தாற்கென்!

பெண்கொடி யேறிய பித்தே

என் மகள் மாயோன் வசப்பட்டு விட்டாள்

3046. ஏறிய பித்தினோ 'டெல்லா

வுலகும்கண் ணன்படைப் ª 'பன்னும்,

நீறுசெவ் வேயிட காணில்

'நெடுமால் அடியார்'என் றோடும்,

நாறு துழாய்மலர் காணில்

'நாரணன் கண்ணியீ ª 'தன்னும்,

தேறியும் தேறாது மாயோன்

திறத்தன ளேயித் திருவே.

கண்ணன் கழல்களை விரும்புகிறாள் என் மகள்.

3047. திருவுடை மன்னரைக் காணில்

'திருமாலைக் கண்டேனே' என்னும்,

உருவுடை வண்ணங்கள் காணில்

'உலகளந் தான்'என்று துள்ளும்,

கருவுடைத் தேவில்க ளெல்லாம்

'கடல்வண்ணன் கோயிலே' என்னும்

வெருவிலும் வீழ்விலும் ஓவாக்

கண்ணன் கழல்கள் விரும்புமே.

கண்ணன் என் பெண்ணை மிரட்டி வைத்திருக்கின்றானே!

3048. விரும்பிப் பகைவரைக் காணில்

'வியலிடம் உண்டானே' என்னும்,

கரும்பெரு மேகங்கள் காணில்

'கண்ணன்'என் றேறப் பறக்கும்,

பெரும்புல ஆநிரை காணில்

'பிரானுளன்' என்றுபின் செல்லும்,

அரும்பெறல் பெண்ணினை மாயோன்

அலற்றி அயர்ப்பிக்கின் றானே!

கண்ணனிடம் மையல் கொண்டுவிட்டாளே என் மகள்!

3049. அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்

அகலவே நீணோக்குக் கொள்ளும்,

வியர்க்கும் மழைக்கண் துளும்ப

வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,

பெயர்த்தும்'கண் ணா!'என்று பேசும்

'பெருமானே!வா'என்று கூவும்,

மயல்பெருங் காதலென் பேதைக்

கென்செய்கேன் வல்வினை யேனே!

இவற்றைப் படிப்போர் வைகுந்தத்தில் வீற்றிருப்பர்

3050. வல்வினை தீர்க்கும் கண்ணனை

வண்குரு கூர்ச்சட கோபன்,

சொல்வினை யால்சொன்ன பாடல்

ஆயிரத் துள்ளிவை பத்தும்,

நல்வினை யென்றுகற் பார்கள்

நலனிடை வைகுந்தம் நண்ணி,

தொல்வினை தீரவெல் லாரும்

தொழுதெழ வீற்றிருப் பாரே.

நேரிசை வெண்பா

மாறனின் பாடல்களின் மீதுமையால் கொள்க

மண்ணுலகில் முன்கலந்து மால்பிரிகை யால்,மாறன்

பெண்ணிலைமை யாய்க்காதற் பித்தேறி,- எண்ணிடில்முன்

போலிமுத லான பொருளையவ னாய்நினைந்து,

மேல்விழுந்தான் மையல்தனின் வீறு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கோவை வாயாள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வீற்றீருந்து
Next