திருத்தேவனார் தொகை (கீழ்ச்சாலை)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருத்தேவனார் தொகை (கீழ்ச்சாலை)

சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென் கிழக்கே 4 மைல். சீர்காழி திருவெண்காடு பஸ் மார்க்கத்தில் திருவாலியில் இறங்கி முக்கால் மைல் வண்டியில் வரலாம். திருநாங்கூரிலிருந்து 2 1/2 மைல் வண்டிப்பாதை. இங்கு வசதி ஒன்றும் கிடையாது.

மூலவர் - தெய்வநாயகன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - மாதவப் பெருமாள்.

தாயார் - கடல்மகள் நாச்சியார். உத்ஸவர் - மாதவநாயகி.

தீர்த்தம் - சோபன புஷ்கரிணி, தேவஸபா புஷ்கரிணி.

விமானம் - சோபன விமானம்.

ப்ரத்யக்ஷம் - வஸிஷ்டர்.

விசேஷம் - இங்கு, தேவர்கள் கூடிப்பேசியதாக வரலாறு. இதுவும் திருநாங்கூர் 11 திருப்பதிகளில் ஒன்று.

குறிப்பு - திருவெள்ளக்குளம், திருக்காவளம்பாடி அர்ச்சகர் இவ்வூரிலும் கைங்கர்யம் செய்வதால், ஸேவிக்கும் நேரத்தை முன் கூட்டியே அமைத்துக்கொள்ளவேண்டும்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1248-57 - 10 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருசெம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
Next