“பெரியவா”ளின் பிள்ளையார் ச்லோகம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-

த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது: |

தத்-ஹேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்

ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ)வ்யாத் ஸ ந: ||

இது தான் ‘ந்யாயேந்து சேகர’ த்தின் மங்கள ச்லோகம்.

இதற்கு என்ன அர்த்தமென்றால் : ‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’ தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்து தர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்பதாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பிள்ளையாரும் தர்க்க சாஸ்திரமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'தத்-ஹேது'நியாயம்
Next