ஷட்பதீ ஸ்தோத்ரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதிலே ஸாக்ஷாத் ஜகத் பரிபாலகனான மஹா விஷ்ணுவைப் பற்றி ரொம்பவும் உயர்ந்த கருத்துக்களும், மனஸை உருக்கும் பாவமும், வாய்க்கு அம்ருதமாக இருக்கிற வாக்கும் கொண்டதான ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்பது ஒன்று. சின்ன ஸ்தோத்ரம்தான். அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு விட்டால் நாம் ஆசார்யாளையும் தெரிந்துகொண்டுவிடலாம்; மஹாவிஷ்ணுவையும் தெரிந்து கொண்டு விடலாம்; நம்மையும் தெரிந்துகொண்டுவிடலாம். நம்மைத் தெரிந்துகொள்கிறபடி தெரிந்து கொள்வதுதான் அத்வைதம். அந்த உச்சாணி வரைக்கும் இந்த ஷட்பதீ நம்மை அழைத்துக்கொண்டு போய்விடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆதிசங்கரரின் பக்தித் துதிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உயிரும் மெய்யும் உயிர்மெய்யும்
Next