காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -29

ஜந்துநாம் நர ஜன்ம துர்லபம்என்ற ஒரு வழக்கு. பிரம்மாவின் படைப்பில் எவ்வளவோ படைப்புகளில் பாக்கியம் உள்ளதால் மனித பிறவி கிட்டியுள்ளது. இதில் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். நல்லவற்றினை தெரிந்து கொள்ள வேண்டும் . ஸைஷனே அப்யஸ்த வித்யானாம் என்ற படி சிறிய வயதிலேயே குருகுலத்தில் குருவினிடம் படிக்கும் பழக்கம் வெகு காலமாகவே வந்துள்ளது. வயது கடந்து படிப்பதில் பயனில்லை. இளமையில் கற்க வேண்டும். இருபத்தி ஐந்து வயது வரை படிக்கிறோம். நம்மை தயாரித்துக் கொள்கிறோம். ஈஸ்வர பக்தியுயனும் குரு பக்தியுடனும் படிப்பு துவங்குகிறது. குரு சொல்வதை சிரத்தையுடன் கேட்டு பக்தியுடன் நடந்து நல்லவர்களாக வாழ வேண்டும். சாந்தீபினியிடம் குரு குலத்தில் சேவை செய்து கிருஷ்ண பகவான் உஜ்ஜெயினியில் படித்து வந்தார். அவருடன் சேர்ந்து படித்தவர் ஸுதாமா என்ற குசேலர். குரு பக்தியுடன் படிக்க வேண்டும். முதலில் கஷ்டப்பட்டால் வருங்காலத்தில் நாட்டிற்கு, குடும்பத்திற்கு சேவை செய்ய முடியும். வருங்காலத்தில் நல்ல குடிமகன்களாக இருக்க மாணவர்களை தயாரிப்பதில் இந்த பள்ளி மிகவும் செயல்படுகிறது. நாங்கள் இத்தகைய பள்ளிகளை பல இடங்களில் கண்டு வருகிறோம். நாட்டிற்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றிற்கு நிவாரணம் நாட்டில் நல்ல குடிமகன்கள் இருந்தால் கஷ்டம் இராது. ஐம்பது ஆண்டுகட்கு முன்பு இந்தியாவிற்கு சுதந்தரம் கிட்டியது. இப்போது உள்ளது ஐம்பது ஆண்டு ஜயந்தி என்று நினைவு கொள்கிறோம். இன்றைய சுதந்திரம் ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தர்மத்துடன், பாரம்பர்யத்துடன், தேச சம்பந்தமாக சுதந்தரமாக இருக்க வேண்டுமே தவிர நினைத்தபடி வாழ்வது அல்ல. ராகேஷ் சர்மா என்பவர் இந்தியாவிலிருந்து ராக்கெட்டில் சென்று சுற்றுகையில் எங்கோ நடந்ததை இங்கு பார்க்கிறோம். விஞ்ஞானம் இதற்குக் காரணம். எந்த சக்தியானாலும் மனிதனின் ஸ்வபாவம் நன்றாக இருந்தால் அதன் பயன் நமக்குக் கிட்டும். விஞ்ஞானத்தை மனிதனுக்கு உபயோகமாக்கிக் கொள்ள வேண்டும். ஆத்ம பலத்தால் நமது தேசம் முன்னேற வேண்டும். பகவானின் அருளால் இந்த சௌகரியம் கிடைத்துள்ளது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். நமது நாட்டில் விசேஷமானவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரசாரத்திற்கு மட்டும் சில செயல்கள் தற்சமயம் நடந்து வருகிறது. பூரமாண செயல்பாடு இல்லை. மனிதவர்கள் நல்லவர்களாக இருந்தால் ஆத்ம பலம் கிடைக்கும். இந்த பலத்துடன் விஞ்ஞானமும் சேர்ந்து செயல்பட்டால் நாடு இன்றும் மேலும் நல்ல முறையில் இருக்கும். நீங்கள் யாவரும் ஆத்மபலம், விஞ்ஞானபலம் ஆகியவற்றினைப் பெற்று பள்ளிக்கு, பெற்றோருக்கு, நாட்டிற்கு தொண்டு செய்ய ஆசீர்வதிக்கிறோம்.

(23-03-98 தாடே பள்ளிகூடம் பாரதீய வித்யாபவன் பள்ளியில் ஆற்றிய தெலுங்கு உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 28
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 30
Next