ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
நமக்கு ரொம்பப் ப்ரியம் குழந்தைகளிடம்தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகிற இடத்தில் தான் என்று சொல்வது உண்டு. குழந்தைக்கு அறிவு வளராததனால் காமக் குரோதங்கள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்கு கோபம் வரும். அழுகை வரும். உடனே இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சிரிக்கும்.விளையாடும்.அழுகை,கோபம் எல்லாம் குழந்தைக்கு வேர் ஊன்றுவது இல்லை. அடுத்த க்ஷணம் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடும். அந்த மாதிரி இருந்து விட்டால் அதுதான் உண்மையான ஞானம்
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |


