ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லிருக்கிறார்கள்.இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி, பக்தனை ஸ்பரிஷித்து அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறோம். காசியில் இருக்கும் விஷாலாக்ஷி , பக்தர்களை அனுக்ரஹ சிந்தனையோடு மனதால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீக்ஷை குருவாக இருக்கிறாள்

- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
தமிழ் தேடல்
Search Site

தெய்வத்தின் குரல் ஆடியோ

Kanchi Mahaswamigal

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்

நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கர மடக் கிளைகள் மற்றும் அவற்றின் விபரங்களைக் காணவும்.