ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
மாயை என்றால் என்ன? விஷ்ணுவைப் பாருங்கள். அவரோ கருநீலம். அவர் படுத்திருக்கும் பாம்பணையோ, பாற்கடலோ சுத்த சத்துவமான ஒரே வெளுப்பு. அவர் தொழிலோ ஜகத்தைஎல்லாம் ரக்ஷிப்பது. அவர் இருக்கும் நிலையோ ஒரே தூக்கம். இவை ஒன்றுகொன்று நேர்விரோதமாக இருக்கின்றன. இது தான் ஈஸ்வர சக்தி. இதற்குதான் மாயை என்று பெயர். மாயை என்றால் எவை ஒன்றோடு ஒன்று சேராதோ அவற்றை எல்லாம் சேர்த்து வைப்பது. சேராததை முடித்து வைப்பது எதுவோ அது மாயை. எது இன்னதென்று சொல்ல முடியாதோ அது மாயை.

- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
தமிழ் தேடல்
Search Site

தெய்வத்தின் குரல் ஆடியோ

Kanchi Mahaswamigal

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்

நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கர மடக் கிளைகள் மற்றும் அவற்றின் விபரங்களைக் காணவும்.